கோவை: மதுக்கடையை திறக்கக்கூடாது என வலியுறுத்தி 68-வது வார்டு பா.ஜ.க., சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
கோவை: மதுக்கடையை திறக்கக்கூடாது என வலியுறுத்தி 68-வது வார்டு பா.ஜ.க., சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் அருகே 500 மீட்டருக்குள் அமைந்துள்ள மதுபான கடையை மூட நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து கோவை மாவட்டத்தில் 160-க்கும் மேற்பட்ட மது கடைகள் மூடபட்டன.தற்போது தமிழக அரசு மூடப்பட்ட கடைகளை திறக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்த சூழலில், ராமநாதபுரம் 68-வது வார்டு 80 அடி சாலையில் இயங்கி வந்த மதுபான கடையும் மூடப்பட்டது. தற்போது அந்த கடையை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதைக் கண்டித்து 68-வது வார்டு பா.ஜ.க., மாவட்ட செயற்குழு உறுப்பினர் கவிதா ராஜன் தலைமையில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடையை திறக்கக் கூடாது என வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
பின்னர் இது குறித்து தெரிவிக்கையில், ஏராளமான குடியிருப்புகள், கோவில்கள், திருமண மண்டபங்கள் உள்ளதாலும் சனிக்கிழமைகளில் வார சந்தை நடைபெறுவதாலும் அப்பகுதியில் கடையை திறக்கக் கூடாது என்றனர்.

மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் அருகே 500 மீட்டருக்குள் அமைந்துள்ள மதுபான கடையை மூட நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து கோவை மாவட்டத்தில் 160-க்கும் மேற்பட்ட மது கடைகள் மூடபட்டன.தற்போது தமிழக அரசு மூடப்பட்ட கடைகளை திறக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்த சூழலில், ராமநாதபுரம் 68-வது வார்டு 80 அடி சாலையில் இயங்கி வந்த மதுபான கடையும் மூடப்பட்டது. தற்போது அந்த கடையை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதைக் கண்டித்து 68-வது வார்டு பா.ஜ.க., மாவட்ட செயற்குழு உறுப்பினர் கவிதா ராஜன் தலைமையில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடையை திறக்கக் கூடாது என வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
பின்னர் இது குறித்து தெரிவிக்கையில், ஏராளமான குடியிருப்புகள், கோவில்கள், திருமண மண்டபங்கள் உள்ளதாலும் சனிக்கிழமைகளில் வார சந்தை நடைபெறுவதாலும் அப்பகுதியில் கடையை திறக்கக் கூடாது என்றனர்.