திருப்பூர்: உடுமலை அருகே மலைவாழ் மக்களின் வழித்தடத்தைக் கேரளா வனத்துறையினர் அடைத்ததால், வேறு வழியின்றி உயிரைப் பணயம் வைத்து ஆற்று வெள்ளத்தில் பயணிக்க வேண்டிய நிலைக்கு மலைக் கிராம மக்கள் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பூர்: உடுமலை அருகே மலைவாழ் மக்களின் வழித்தடத்தைக் கேரளா வனத்துறையினர் அடைத்ததால், வேறு வழியின்றி உயிரைப் பணயம் வைத்து ஆற்று வெள்ளத்தில் பயணிக்க வேண்டிய நிலைக்கு மலைக் கிராம மக்கள் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அமராவதி வனச்சரகத்தில் தளிஞ்சி, மஞ்சம்பட்டி, மூங்கில்பள்ளம் கீழானவயல், தளிஞ்சிவயல் உள்ளிட்ட மலைவாழ் கிராமங்கள் உள்ளன. இவற்றில், 600 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பல நூறு ஆண்டுகளாக தங்கள் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த சம்பக்காடு பாதையை பயன்படுத்தி வந்தனர். கடந்த பிப்ரவரி மாதம் கேரளா வனத்துறையினர் அந்தப் பகுதி தங்களுக்கு சொந்தமானது என்று கூறி, கம்பி வேலி அமைத்து தமிழக பகுதி மலைவாழ் மக்கள் சென்று வர அனுமதி மறுத்தது.

இதனால், மலைவாழ் மக்கள் 6 கி.மீ., சுற்றி கூட்டாறு வழியாக சென்று வந்தனர். தமிழக வனத்துறை அதிகாரிகள் சார்பில் கேரளா வனத்துறையிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகவும், மலைவாழ்மக்கள் திரும்ப அந்த வழித்தடத்தைப் பயன்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருவதாக சாக்கு போக்கான பதில்களை கூறி வந்தனர். 4 மாதங்கள் ஆகியும், இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் தமிழக வனத்துறை சார்பில் எடுக்கப்படவில்லை என்பது தற்போது உறுதியாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சிமலை பகுதிகளில் பெய்து வரும் கன மழை மற்றும் கேரளா மாநிலம் மூணாறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, இப்பகுதி மலைவாழ் மக்கள் பயன்படுத்தி வந்த கூட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அடிப்படைத் தேவைகள் மற்றும் மருத்துவ வசதிகளுக்கோ அவர்கள் ஆற்றில் இறங்கி செல்ல வேண்டியுள்ளது. நேற்று முன்தினம் ரேசன் பொருட்கள் வாங்கி சென்ற 3 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் ஆற்றைக் கடக்கும் போது குடும்ப அட்டைகள் மற்றும் ரேசன் பொருட்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. அவர்கள் சிறிது தூரத்தில் மரக்கிளைகளைப் பிடித்து கரை ஒதுங்கி உள்ளனர்.

மலைவாழ் மக்களுக்கு வழங்க வேண்டிய அரசின் இலவச அரிசி கொண்டு சென்ற வாகனமும், ஆற்றைக் கடக்க முடியாததால் சின்னாறு வனத்துறை சோதனை சாவடியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மலைவாழ் மக்கள் தங்கள் அடிப்படை தேவைகளான உணவுக்கு தேவையான பொருட்கள் கூட வாங்குவதற்கு வெளியில் வர முடியாத சூழல் உள்ளது. மலைவாழ் மக்கள் தங்கள் பச்சிளம் குழந்தைகளுடன் தோளில் சுமந்தபடி, உயிரை பணயம் வைத்து தினமும் கடந்து செல்கின்றனர். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட குடும்ப அட்டைகள் திரும்ப கிடைக்க அரசு அதிகாரிகளும் வனத்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறுகின்றனர்.

மழை தொடர்ந்தால் 600 குடும்பங்களும் எந்த அடிப்படை வசதிகளும் இன்றி பரிதவிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. கூட்டாறு பகுதியில் மேல்மட்ட பாலம் கட்ட வேண்டும் அல்லது கேரளா வனத்துறையிடம் பேச்சு நடத்தி பல நூறு ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த சம்பக்காடு பகுதியை மீட்டுத் தர வேண்டும் என்பதே அப்பகுதி மலைவாழ் மக்களின் ஒட்டு மொத்த கோரிக்கையாகும்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அமராவதி வனச்சரகத்தில் தளிஞ்சி, மஞ்சம்பட்டி, மூங்கில்பள்ளம் கீழானவயல், தளிஞ்சிவயல் உள்ளிட்ட மலைவாழ் கிராமங்கள் உள்ளன. இவற்றில், 600 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பல நூறு ஆண்டுகளாக தங்கள் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த சம்பக்காடு பாதையை பயன்படுத்தி வந்தனர். கடந்த பிப்ரவரி மாதம் கேரளா வனத்துறையினர் அந்தப் பகுதி தங்களுக்கு சொந்தமானது என்று கூறி, கம்பி வேலி அமைத்து தமிழக பகுதி மலைவாழ் மக்கள் சென்று வர அனுமதி மறுத்தது.

இதனால், மலைவாழ் மக்கள் 6 கி.மீ., சுற்றி கூட்டாறு வழியாக சென்று வந்தனர். தமிழக வனத்துறை அதிகாரிகள் சார்பில் கேரளா வனத்துறையிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகவும், மலைவாழ்மக்கள் திரும்ப அந்த வழித்தடத்தைப் பயன்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருவதாக சாக்கு போக்கான பதில்களை கூறி வந்தனர். 4 மாதங்கள் ஆகியும், இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் தமிழக வனத்துறை சார்பில் எடுக்கப்படவில்லை என்பது தற்போது உறுதியாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சிமலை பகுதிகளில் பெய்து வரும் கன மழை மற்றும் கேரளா மாநிலம் மூணாறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, இப்பகுதி மலைவாழ் மக்கள் பயன்படுத்தி வந்த கூட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அடிப்படைத் தேவைகள் மற்றும் மருத்துவ வசதிகளுக்கோ அவர்கள் ஆற்றில் இறங்கி செல்ல வேண்டியுள்ளது. நேற்று முன்தினம் ரேசன் பொருட்கள் வாங்கி சென்ற 3 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் ஆற்றைக் கடக்கும் போது குடும்ப அட்டைகள் மற்றும் ரேசன் பொருட்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. அவர்கள் சிறிது தூரத்தில் மரக்கிளைகளைப் பிடித்து கரை ஒதுங்கி உள்ளனர்.

மலைவாழ் மக்களுக்கு வழங்க வேண்டிய அரசின் இலவச அரிசி கொண்டு சென்ற வாகனமும், ஆற்றைக் கடக்க முடியாததால் சின்னாறு வனத்துறை சோதனை சாவடியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மலைவாழ் மக்கள் தங்கள் அடிப்படை தேவைகளான உணவுக்கு தேவையான பொருட்கள் கூட வாங்குவதற்கு வெளியில் வர முடியாத சூழல் உள்ளது. மலைவாழ் மக்கள் தங்கள் பச்சிளம் குழந்தைகளுடன் தோளில் சுமந்தபடி, உயிரை பணயம் வைத்து தினமும் கடந்து செல்கின்றனர். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட குடும்ப அட்டைகள் திரும்ப கிடைக்க அரசு அதிகாரிகளும் வனத்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறுகின்றனர்.

மழை தொடர்ந்தால் 600 குடும்பங்களும் எந்த அடிப்படை வசதிகளும் இன்றி பரிதவிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. கூட்டாறு பகுதியில் மேல்மட்ட பாலம் கட்ட வேண்டும் அல்லது கேரளா வனத்துறையிடம் பேச்சு நடத்தி பல நூறு ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த சம்பக்காடு பகுதியை மீட்டுத் தர வேண்டும் என்பதே அப்பகுதி மலைவாழ் மக்களின் ஒட்டு மொத்த கோரிக்கையாகும்.