நீலகிரி : நீலகிரியின் தந்தை சர் ஜான் சல்லிவனின் 230-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மலர்தூவி மரியாதை செய்தார்.
நீலகிரி : நீலகிரியின் தந்தை சர் ஜான் சல்லிவனின் 230-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மலர்தூவி மரியாதை செய்தார்.
நீல மலைகளையும், பள்ளத்தாக்கு காட்சிகளையும் கொண்ட மலைகளின் அரசியாக திகழும் நீலகிரி மாவட்டத்தை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தவர் சர் ஜான் சல்லிவன். இவரது 230-வது பிறந்தநாள் ஆண்டுதோறும் ஜுன் 15-ம் தேதி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
ஆங்கிலயேர் ஆட்சி காலத்தில் 1817-ம் ஆண்டில் கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த சல்லிவன், 1819-ம் ஆண்டு மலையேற்ற பயணமாக நீலகிரிக்குச் சென்றார். இதைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தை உருவாக்குவதிலும், பொருளாதாரத்தை முன்னேற்றுவதிலும் முக்கிய பங்காற்றினார். இதனால், முதன்முதலாக அவர் தங்கிய கன்னேரிமுக்கு கிராமத்தில் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தில், ஆண்டுதோறும் சல்லிவனின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.
நீலகிரியை உலகிற்கு அறிமுகம் செய்ததோடு, தேயிலை, கேரட், உருளைக்கிழங்கு மட்டுமல்லாது, பல்வேறு ஆங்கில காய்கறிகளை மற்றும் பழங்களை மாவட்டத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார். இதன்மூலம், மாவட்ட பொருளாதாரத்திற்கு முன்னோடியாகத் திகழ்ந்த காரணமாக நீலகிரியின் தந்தை என்று சர் ஜான் சல்லிவன் அழைக்கப்படுவதுண்டு.
இந்த நிலையில், அவரது 230-வது பிறந்த நாளையொட்டி கன்னேரிமுக்கு கிராமத்தில் அமைந்துள்ள சல்லிவன் நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
நீல மலைகளையும், பள்ளத்தாக்கு காட்சிகளையும் கொண்ட மலைகளின் அரசியாக திகழும் நீலகிரி மாவட்டத்தை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தவர் சர் ஜான் சல்லிவன். இவரது 230-வது பிறந்தநாள் ஆண்டுதோறும் ஜுன் 15-ம் தேதி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
ஆங்கிலயேர் ஆட்சி காலத்தில் 1817-ம் ஆண்டில் கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த சல்லிவன், 1819-ம் ஆண்டு மலையேற்ற பயணமாக நீலகிரிக்குச் சென்றார். இதைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தை உருவாக்குவதிலும், பொருளாதாரத்தை முன்னேற்றுவதிலும் முக்கிய பங்காற்றினார். இதனால், முதன்முதலாக அவர் தங்கிய கன்னேரிமுக்கு கிராமத்தில் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தில், ஆண்டுதோறும் சல்லிவனின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.
நீலகிரியை உலகிற்கு அறிமுகம் செய்ததோடு, தேயிலை, கேரட், உருளைக்கிழங்கு மட்டுமல்லாது, பல்வேறு ஆங்கில காய்கறிகளை மற்றும் பழங்களை மாவட்டத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார். இதன்மூலம், மாவட்ட பொருளாதாரத்திற்கு முன்னோடியாகத் திகழ்ந்த காரணமாக நீலகிரியின் தந்தை என்று சர் ஜான் சல்லிவன் அழைக்கப்படுவதுண்டு.
இந்த நிலையில், அவரது 230-வது பிறந்த நாளையொட்டி கன்னேரிமுக்கு கிராமத்தில் அமைந்துள்ள சல்லிவன் நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.