நீலகிரி: கூடலூர் வனப் பகுதியில் 12 வயது மதிக்கத்தக்க கட்டு யானை ஒன்று நேற்று மர்மமான முறையில் உயிரிழந்தது.
நீலகிரி: கூடலூர் வனப் பகுதியில் 12 வயது மதிக்கத்தக்க கட்டு யானை ஒன்று நேற்று மர்மமான முறையில் உயிரிழந்தது.
கூடலூரை அடுத்த சேரம்பாடி வனப் பகுதியில் உள்ள பந்தலூர் பகுதியில் நேற்று முன்தினம் 12 மதிக்கத்தக்க யானை ஒன்று வாயில் காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்தது.

தற்போது இறந்த யானையின் உடற்கூறாய்வுகள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
வனத்துறை மருத்துவர் மனோகர் கூறுகையில், "தற்போது உயிரிழந்த யானைக்கு வாய் பகுதியில் காயம் உள்ளது. இது யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலாக தெரிவில்லை. நாட்டு வெடிகுண்டு வெடித்ததே இந்த காயத்திற்கு காயம் என தெரிகிறது. அதற்கு பல் மற்றும் வாய் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது." என்றார்.
வேட்டையர்கள் நாட்டு வெடிகுண்டு வைத்த காரணத்தால் யானை உயிரிழந்திருக்கக் கூடும் என்ற நிலையில், இது தொடர்பாக வனத்துறையினர் முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கூடலூரை அடுத்த சேரம்பாடி வனப் பகுதியில் உள்ள பந்தலூர் பகுதியில் நேற்று முன்தினம் 12 மதிக்கத்தக்க யானை ஒன்று வாயில் காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்தது.

தற்போது இறந்த யானையின் உடற்கூறாய்வுகள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
வனத்துறை மருத்துவர் மனோகர் கூறுகையில், "தற்போது உயிரிழந்த யானைக்கு வாய் பகுதியில் காயம் உள்ளது. இது யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலாக தெரிவில்லை. நாட்டு வெடிகுண்டு வெடித்ததே இந்த காயத்திற்கு காயம் என தெரிகிறது. அதற்கு பல் மற்றும் வாய் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது." என்றார்.
வேட்டையர்கள் நாட்டு வெடிகுண்டு வைத்த காரணத்தால் யானை உயிரிழந்திருக்கக் கூடும் என்ற நிலையில், இது தொடர்பாக வனத்துறையினர் முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.