சிறுத்தை தாக்கி பெண் தொழிலாளி படுகாயம்: வால்பாறையில் தொடரும் அச்சுறுத்தல்

கோவை: வால்பாறையில் சிறுத்தைப் புலி தாக்கியதில் பெண் தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்தார்.

கோவை: வால்பாறையில் சிறுத்தைப் புலி தாக்கியதில் பெண் தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்தார்.

கோவை மாவட்ட ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஏராளமான சிறுத்தைகள் புலிகள் யானைகள் உள்ளன. இந்நிலையில், சிறுத்தைப்புலிகள் தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அவர்கள் வளர்க்கும் கால்நடைகள் மற்றும் நாய்களை கொன்று தின்று வருகின்றன.

மேலும், எதிரில் தென்படும் மனிதர்கள், குழந்தைகளையும் தாக்கி வருகின்றன. இந்நிலையில், இன்று மாலை வால்பாறையை அடுத்த சின்கோனா தேயிலை தோட்டத்தில் மாதவி (36) என்ற பெண் தொழிலாளி தனது வீட்டு வாசப்படியில் அமர்ந்திருந்தார்.

அப்போது தேயிலை செடிகள் மத்தியில் பதுங்கி இருந்த சிறுத்தைப்புலி ஒன்று திடீரென அவரைத் தாக்கி தூக்கி கொண்டு ஓடியது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது கணவர் பாலகிருஷ்ணன் கூச்சலிட்டபடி சிறுத்தையை விரட்டி தாக்கியுள்ளார்.

தொடர்ந்து, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வரவே சிறுத்தை மாதவியை காட்டில் போட்டு விட்டு தப்பி ஓடியது.

மாதவியை மீட்ட அவர்கள் வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். முதலுதவி சிகிச்சைக்குப் பின் அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக வால்பாறை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சிறுத்தைப் புலியின் நடமாட்டம் அப்பகுதியில் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....