திருப்பூர்: திருப்பூர் சார் ஆட்சியரைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று இரவு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்: திருப்பூர் சார் ஆட்சியரைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று இரவு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் சார் ஆட்சியராக ஷ்ரவண்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், அரசு ஊழியர்களிடம் விரோத போக்கினை கடைபிடிப்பதாகவும், ஊழியர்களை தேவையில்லாமல் பணி இடம் மாற்றம் செய்வதாகவும் கிராம நிர்வாக அலுவலர்கள் புகார் தெரிவித்தனர். மேலும், சார் ஆட்சியரைக் கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக மாவட்டம் முழுவதும் 90-க்கும் மேற்பட்ட இடங்களில் 150-க்கும் அதிகமான கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று இரவு நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகம் சார் ஆட்சியர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

திருப்பூர் சார் ஆட்சியராக ஷ்ரவண்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், அரசு ஊழியர்களிடம் விரோத போக்கினை கடைபிடிப்பதாகவும், ஊழியர்களை தேவையில்லாமல் பணி இடம் மாற்றம் செய்வதாகவும் கிராம நிர்வாக அலுவலர்கள் புகார் தெரிவித்தனர். மேலும், சார் ஆட்சியரைக் கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக மாவட்டம் முழுவதும் 90-க்கும் மேற்பட்ட இடங்களில் 150-க்கும் அதிகமான கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று இரவு நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகம் சார் ஆட்சியர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.