திருப்பூரில் முறைகேடாக இயங்கி வந்த எண்ணெய் குடோனில் அதிகாரிகள் ஆய்வு

திருப்பூர் : திருப்பூர் அருகே முறைகேடாக இயங்கி வந்த எண்ணெய் குடோனில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

திருப்பூர் : திருப்பூர் அருகே முறைகேடாக இயங்கி வந்த எண்ணெய் குடோனில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட ஷெரீப் காலனி அரண்மணைபுதூர் பகுதியில் சுரேஷ் (33) என்பவர் போலியான எண்ணெய் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனம் வைத்து நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, உணவு பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, நேற்றைய தினம் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 

இந்த ஆய்வின் முடிவில் எண்ணெய் தயாரிப்பு நிறுவனம் போலியான முகவரியுடன், கடலை எண்ணெய் பாக்கெட்டில் பாமாயிலை நிரப்பி விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. மேலும், இரண்டு வகையான எண்ணெய் பாக்கெட்டுகளில் சுமார் 1,500 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த இரண்டு வகையான எண்ணெய் பாக்கெட்டுகளின் உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்விற்கு அனுப்பப்பட்டது. 

இந்த ஆய்வின் முடிவிற்குப் பிறகு எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, பொதுமக்கள் எண்ணெய்கள் வாங்கும் போது மிகவும் கவனத்துடன் பாக்கெட்டுகளில் தயாரிப்பு தேவி, காலாவதி தேதி, முழுமையான முகவரி, பேட்ச் நம்பர் போன்ற இதர விபரங்களைக் கண்டறிந்து வாங்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...