திருப்பூர் : திருப்பூர் அருகே முறைகேடாக இயங்கி வந்த எண்ணெய் குடோனில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
திருப்பூர் : திருப்பூர் அருகே முறைகேடாக இயங்கி வந்த எண்ணெய் குடோனில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட ஷெரீப் காலனி அரண்மணைபுதூர் பகுதியில் சுரேஷ் (33) என்பவர் போலியான எண்ணெய் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனம் வைத்து நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, உணவு பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, நேற்றைய தினம் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் முடிவில் எண்ணெய் தயாரிப்பு நிறுவனம் போலியான முகவரியுடன், கடலை எண்ணெய் பாக்கெட்டில் பாமாயிலை நிரப்பி விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. மேலும், இரண்டு வகையான எண்ணெய் பாக்கெட்டுகளில் சுமார் 1,500 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த இரண்டு வகையான எண்ணெய் பாக்கெட்டுகளின் உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்விற்கு அனுப்பப்பட்டது.
இந்த ஆய்வின் முடிவிற்குப் பிறகு எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, பொதுமக்கள் எண்ணெய்கள் வாங்கும் போது மிகவும் கவனத்துடன் பாக்கெட்டுகளில் தயாரிப்பு தேவி, காலாவதி தேதி, முழுமையான முகவரி, பேட்ச் நம்பர் போன்ற இதர விபரங்களைக் கண்டறிந்து வாங்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட ஷெரீப் காலனி அரண்மணைபுதூர் பகுதியில் சுரேஷ் (33) என்பவர் போலியான எண்ணெய் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனம் வைத்து நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, உணவு பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, நேற்றைய தினம் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் முடிவில் எண்ணெய் தயாரிப்பு நிறுவனம் போலியான முகவரியுடன், கடலை எண்ணெய் பாக்கெட்டில் பாமாயிலை நிரப்பி விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. மேலும், இரண்டு வகையான எண்ணெய் பாக்கெட்டுகளில் சுமார் 1,500 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த இரண்டு வகையான எண்ணெய் பாக்கெட்டுகளின் உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்விற்கு அனுப்பப்பட்டது.
இந்த ஆய்வின் முடிவிற்குப் பிறகு எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, பொதுமக்கள் எண்ணெய்கள் வாங்கும் போது மிகவும் கவனத்துடன் பாக்கெட்டுகளில் தயாரிப்பு தேவி, காலாவதி தேதி, முழுமையான முகவரி, பேட்ச் நம்பர் போன்ற இதர விபரங்களைக் கண்டறிந்து வாங்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.