பிறை தென்படாததால் நாளை மறுதினம் கொண்டாடப்படுகிறது ரமலான் பண்டிகை

நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட இருந்த ரமலான் பண்டிகை, பிறை தென்படாததால் நாளை மறுதினம் (ஜுன் 16) கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது ஹயூப் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட இருந்த ரமலான் பண்டிகை, பிறை தென்படாததால் நாளை மறுதினம் (ஜுன் 16) கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது ஹயூப் அறிவித்துள்ளார். 

ரமலான் நோன்பு ஆரம்பித்து இன்றுடன் ஒரு மாதம் ஆன நிலையில், பிறை தெரிந்தவுடன் இரமலான் கொண்டாட்டங்கள் தொடங்கிவிடும். இதனால், ரமலான் விடுமுறை நாளையா..? அல்லது நாளை மறுதினமா..? என்ற குழப்பம் நிலவி வந்தது. இந்த நிலையில், ரமலான் பண்டிகை நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, தமிழகத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், பிறை தென்படாததால் நாளை மறுதினம் (ஜுன் 16) ரமலான் பண்டிகைக் கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது ஹயூப் அறிவித்துள்ளார். இதனால், நாளை அறிவிக்கப்பட்டிருந்த பொதுவிடுமுறை தமிழக அரசு ரத்து செய்தது. மேலும், பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல, நாளை செயல்படும். சனிக்கிழமை பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, கோவை ஹிலால் கமிட்டியின் சார்பில் ஷவ்வால் பிறை பார்த்து நோன்பு பெருநாள் முடிவு செய்யும் கூட்டம், ஷம்சுல் இஸ்லாம் ஹனஃபி சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் M.A. இஸ்மத் தலைமையில் மாலை 7 மணியளவில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழகத்தில் எங்கும் ஷவ்வால் பிறை தென்படாததால் நாளை ரமலான் பிறை 30-ஆக பூர்த்தி செய்து, நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஷவ்வால் பிறை 1 என்றும் நோன்பு பெருநாள் என்றும் முடிவு செய்யப்பட்டது. 

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....