கோவை அருகே காட்டு யானை தாக்கியதில் முதியவர் படுகாயம்

கோவை : மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 55 வயது முதியவர் படுகாயமடைந்தார்.

கோவை : மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 55 வயது முதியவர் படுகாயமடைந்தார். 

நெல்லித்துரை பகுதி பூதப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜே. சின்னன் (55). இவர் இன்று மதியம் 2.15 மணியளவில் வனப்பகுதிக்குள் சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த காட்டு யானை சின்னனை பயங்கரமாகத் தாக்கிவிட்டு, அங்கிருந்து சென்றது. இதையறிந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். காட்டு யானை தாக்கியதில், கிராமவாசி ஒருவர் படுகாயம் அடைந்தது அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...