மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் மற்றும் தற்போதைய பணியில் இருக்கும் வனத்துறை அதிகாரிகள் 10 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் மற்றும் தற்போதைய பணியில் இருக்கும் வனத்துறை அதிகாரிகள் 10 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தமிழக அரசு கடந்த 2011-ல் வனப்பகுதிகள் மற்றும் பொது இடங்களில் மரக்கன்று நடுதல் மற்றும் பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தைக் கொண்டு வந்தது. வனத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்ட திட்டத்துக்கு ஜப்பான் நிதியுதவி அளித்தது. 2011 - 2019 வரை ரூ. 668 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. சென்னை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களில் லட்சக்கணக்கான மரங்கள் நடப்பட்டு வந்தன. இந்நிலையில், திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் சென்றது.
அதன்படி, தமிழகம் முழுவதும் போலீசார் நடத்திய விசாரணையில் பல மாவட்டங்களில் மோசடி நடந்திருப்பது தெரிய வந்தது. கோவை லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணையில், கோவை மண்டல வனத்துறையில் 2014ல் மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கோவை வனத்துறை மண்டலத்துக்கு உட்பட்ட, 16 கிராமங்களில் மரங்கன்றுகள் நட, 33.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதில், மரங்கன்றுகள் நடவு செய்யாமல் போலியாக 'பில்' தயாரித்து, மரங்கன்றுகள் நடப்பட்டதாக 10 லட்சம் ரூபாய்க்கு மேல் ஊழல் செய்தது தெரிய வந்தது.
கோவை மண்டல வனத்துறை அதிகாரி பொறுப்பில் இருந்த சேகர் (55), ஓய்வு பெற்ற வனச்சரகர் முருகேசன் (63), வனத்துறை ஒப்பந்ததாரர் கணேசன், (59), ஆகியோர் ஊழல் முறைகேடு செய்தது தெரியவந்துள்ளது.
மேலும், கிருஷ்ணகிரி வனச்சரகத்திற்குட்பட்ட வன அதிகாரிகள் கே. நாகேஷ், ஜி. விமலநாதன் (ஊத்தங்கரை), பன்னீர்செல்வம் (ராயக்கோட்டை வனச்சரகம்), அண்ணாதுரை (கிருஷ்ணகிரி), வேழவந்தான் (ஒசூர்), ஓய்வுபெற்ற அதிகாரி எம். பெருமாள், எம். ராமகிருஷ்ணன், பி. மோகன்குமார், வி. நாகராஜன் உள்ளிட்டோர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தமிழக அரசு கடந்த 2011-ல் வனப்பகுதிகள் மற்றும் பொது இடங்களில் மரக்கன்று நடுதல் மற்றும் பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தைக் கொண்டு வந்தது. வனத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்ட திட்டத்துக்கு ஜப்பான் நிதியுதவி அளித்தது. 2011 - 2019 வரை ரூ. 668 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. சென்னை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களில் லட்சக்கணக்கான மரங்கள் நடப்பட்டு வந்தன. இந்நிலையில், திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் சென்றது.
அதன்படி, தமிழகம் முழுவதும் போலீசார் நடத்திய விசாரணையில் பல மாவட்டங்களில் மோசடி நடந்திருப்பது தெரிய வந்தது. கோவை லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணையில், கோவை மண்டல வனத்துறையில் 2014ல் மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கோவை வனத்துறை மண்டலத்துக்கு உட்பட்ட, 16 கிராமங்களில் மரங்கன்றுகள் நட, 33.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதில், மரங்கன்றுகள் நடவு செய்யாமல் போலியாக 'பில்' தயாரித்து, மரங்கன்றுகள் நடப்பட்டதாக 10 லட்சம் ரூபாய்க்கு மேல் ஊழல் செய்தது தெரிய வந்தது.
கோவை மண்டல வனத்துறை அதிகாரி பொறுப்பில் இருந்த சேகர் (55), ஓய்வு பெற்ற வனச்சரகர் முருகேசன் (63), வனத்துறை ஒப்பந்ததாரர் கணேசன், (59), ஆகியோர் ஊழல் முறைகேடு செய்தது தெரியவந்துள்ளது.
மேலும், கிருஷ்ணகிரி வனச்சரகத்திற்குட்பட்ட வன அதிகாரிகள் கே. நாகேஷ், ஜி. விமலநாதன் (ஊத்தங்கரை), பன்னீர்செல்வம் (ராயக்கோட்டை வனச்சரகம்), அண்ணாதுரை (கிருஷ்ணகிரி), வேழவந்தான் (ஒசூர்), ஓய்வுபெற்ற அதிகாரி எம். பெருமாள், எம். ராமகிருஷ்ணன், பி. மோகன்குமார், வி. நாகராஜன் உள்ளிட்டோர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.