நாளை வெளியாகும் 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க தீர்ப்பால் ஆட்சி மாற்றம் நிகழும் : கோவையில் செந்தில்பாலாஜி நம்பிக்கை

கோவை : 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், இந்தத் தீர்ப்பு ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுக்கும் என முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோவை : 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், இந்தத் தீர்ப்பு ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுக்கும் என முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோவை குறிச்சி பகுதியில் அ.ம.மு.க., சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- நாளை (ஜுன் 14) வெளியாகும் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு, 18 பேரும் மீண்டும் சட்டமன்றப் பணிகளை செய்யும் வகையில் நல்ல தீர்ப்பாக வரும். மேலும், மீண்டும் சட்டமன்றத்திற்கு டி.டி.வி., தினகரன் தலைமையில் செல்வோம். 6 கோடி வாக்காளர்களும் விரும்பும் வகையில் ஆட்சி மாற்றம் ஏற்படும். இந்தத் தீர்ப்பு ஆட்சி மாற்றத்திற்கான தீர்ப்பாக அமையும். தமிழக மக்களுக்கு விடிவு காலத்தை ஏற்படுத்தும் தீர்ப்பாகவும் இருக்கும். 

மேலும், சென்னை - சேலம் இடையே புதிய சாலையினை மக்கள் எதிர்ப்பை மீறி அடாவடித்தனமாக செயல்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறார். போராட்டம் நடத்தி வரும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த முதலமைச்சர் தயாராக இல்லை. மத்திய மோடி அரசின் நிழல் அரசாக தமிழக அரசு செயல்படுகிறது. விரைவில் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் இருக்கும். டி.டி.வி., தினகரன் அடுத்த முதலமைச்சராவர். 

தமிழக அரசின் மக்கள் விரோத செயல்பாட்டிற்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் மீது காவல்துறை பொய் வழக்கு போடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. ஊழல் செய்து வரும் அமைச்சர்கள் ஆட்சி.மாற்றத்திற்குப் பின்னர் சிறைக்கு செல்வார்கள், என்றார். 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...