கோவை : பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் கோவையிலும் தொடங்கியது.
கோவை : பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் கோவையிலும் தொடங்கியது.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி, 21 மாத ஊதிய உயர்வு நிலுவை தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி சென்னையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 3-வது நாளாக போராட்டம் நடந்து வரும் நிலையில், இன்று முதலமைச்சரை சந்திக்க பேரணியாக சென்றனர். ஆனால், அவர்களை போலீசார் கைது செய்தனர்.
போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட மாநில நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அரசு ஊழியர் சங்க செயலாளர் குமார், ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் பாபு உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி, 21 மாத ஊதிய உயர்வு நிலுவை தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி சென்னையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 3-வது நாளாக போராட்டம் நடந்து வரும் நிலையில், இன்று முதலமைச்சரை சந்திக்க பேரணியாக சென்றனர். ஆனால், அவர்களை போலீசார் கைது செய்தனர்.
போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட மாநில நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அரசு ஊழியர் சங்க செயலாளர் குமார், ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் பாபு உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.