கோவை: ரயில் பயணிகள் உணவு பொருட்களை ஆர்டர் செய்யவும் மற்றும் ரயில்வே சார்ந்த புகார்களைத் தெரிவிக்கவும் இரண்டு புதிய செயலிகளை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.
கோவை: ரயில் பயணிகள் உணவு பொருட்களை ஆர்டர் செய்யவும் மற்றும் ரயில்வே சார்ந்த புகார்களைத் தெரிவிக்கவும் இரண்டு புதிய செயலிகளை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.
பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் அவ்வப்போது புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதுகுறித்து, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், "ரயில் பயணிகள் தங்கள் புகார்கள், கருத்துக்கள் உள்ளிட்டவற்றை உடனடியாக பதிவு செய்ய வசதியாக 'Rail MADAD' என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 'menu on rails' என்ற செயலி மூலம் பயணத்தின் போது பயணிகள் தங்கள் உணவுகளை ஆர்டர் செய்யலாம். பராமரிப்பு தொடர்பான புகார்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார்.

பிளாஸ்டிக் பாட்டில்

பிளாஸ்டிக் இல்லா ரயில்வே நிலையங்களை உருவாக்கும் முயற்சியில் பிளாஸ்டிக் பாட்டில்களை நொறுக்கும் புதிய இயந்திரத்தை கொண்டுவந்துள்ளது ரயில்வே துறை. மேலும் பிளாஸ்டிக் பாட்டில் நொறுக்கும் இந்த புதிய இயந்திரம் பல்வேறு வரவேற்புகளைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.