கோவை: கோவை மத்திய சிறையில் சின்னக்காளை என்ற கைதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
கோவை: கோவை மத்திய சிறையில் சின்னக்காளை என்ற கைதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
கடந்த 2007-ல் நடந்த கொலை வழக்கில் சின்னக்காளை என்பவர் கைதாகி ஆயுள் தண்டனை கைதியாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு ஏற்கனவே சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த நோய்கள் இருந்தன.
இந்த நிலையில், நேற்று இரவு சின்னக்காளைக்கு உடல் நிலை மோசமடைந்ததையடுத்து, அவரை சிறைக் காவலர்கள் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே இறந்து விட்டார்.
அவரது இறப்பை உறுதி செய்த மருத்துவர்கள், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.