கோவை : கோவை மாவட்டம் உப்பிலிபாளையம் ரயில்வே மேம்பாலத்தின் அடியில் சிறிய ரக கனரக வாகனம் சிக்கி கொண்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவை : கோவை மாவட்டம் உப்பிலிபாளையம் ரயில்வே மேம்பாலத்தின் அடியில் சிறிய ரக கனரக வாகனம் சிக்கி கொண்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவை .- அவினாசி நெடுஞ்சாலையானது, உப்பிலிபாளையம் மேம்பாலம் வழியாகத் தான் தொடங்குகிறது. பாலத்திற்கு அடியில் இருசக்கர வாகனங்கள், கார்கள் மட்டுமே பயணிக்க முடியும் என்பதால், இந்தப் பகுதிகளில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், தடையை மீறி அவ்வழியாக சென்ற வாகனம் ஒன்று ரயில்கள் செல்லும் பாலத்தின் அடியே வாகனத்தின் மேற்கூரை சிக்கியது.
இதனால், வாகனத்தை நகர்த்த முடியாத சூழல் ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவ்வழியாக போக்குவரத்து தடை செய்தனர். பிறகு, வாகனத்தின் மேற்பகுதி பாலத்தில் சிக்கியதால், உடனடியாக வெல்டிங் இயந்திரத்தைப் பயன்படுத்தி வாகனத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சில மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், நீண்ட முயற்சிக்குப் பிறகு, வாகனத்தின் பகுதியை மேம்பாலத்தில் இருந்து அகற்றினர். இதைத் தொடர்ந்து, அந்த வழியான போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.
கோவை .- அவினாசி நெடுஞ்சாலையானது, உப்பிலிபாளையம் மேம்பாலம் வழியாகத் தான் தொடங்குகிறது. பாலத்திற்கு அடியில் இருசக்கர வாகனங்கள், கார்கள் மட்டுமே பயணிக்க முடியும் என்பதால், இந்தப் பகுதிகளில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், தடையை மீறி அவ்வழியாக சென்ற வாகனம் ஒன்று ரயில்கள் செல்லும் பாலத்தின் அடியே வாகனத்தின் மேற்கூரை சிக்கியது.
இதனால், வாகனத்தை நகர்த்த முடியாத சூழல் ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவ்வழியாக போக்குவரத்து தடை செய்தனர். பிறகு, வாகனத்தின் மேற்பகுதி பாலத்தில் சிக்கியதால், உடனடியாக வெல்டிங் இயந்திரத்தைப் பயன்படுத்தி வாகனத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சில மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், நீண்ட முயற்சிக்குப் பிறகு, வாகனத்தின் பகுதியை மேம்பாலத்தில் இருந்து அகற்றினர். இதைத் தொடர்ந்து, அந்த வழியான போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.