குடியிருப்புகளை அகற்றும் நடவடிக்கையைக் கண்டித்து 18-ம் தேதி உக்கடத்தில் போராட்டம்

கோவை: உக்கடம் பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்காக குடியிருப்பு பகுதிகளை அகற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 18-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக மக்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு கூட்டியக்கம் அறிவித்துள்ளது.



கோவை : உக்கடம் பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்காக குடியிருப்பு பகுதிகளை அகற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 18-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக உக்கடம் மக்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு கூட்டியக்கம் அறிவித்துள்ளது. 



உக்கடம் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ஒப்பணக்கார வீதி முதல் ஆத்துப்பாலம் வரை உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. பாலம் அமையவிருக்கும் பகுதி அருகே 1000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. பாலம் கட்டுமானப் பணிகளுக்காக இந்தக் குடியிருப்புகளை அப்புறப்படுத்தக் குடிசை மாற்று வாரியம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதனைக் கண்டித்து, உக்கடம் மக்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் வரும் 18-ம் தேதி உக்கடம் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. இந்தப் போராட்டத்தில், கூட்டியக்கத்தில் அங்கம் வகிக்கும் தந்தை பெரியார் திராவிடக் கழகம், திராவிட விடுதலை கட்சி, ஆதித் தமிழர் பேரவை, பீபுள் ஃப்ராண்ட் ஆஃப் இந்தியா ஆகிய அமைப்புகள் பங்கேற்க இருக்கின்றன.



இந்த நிலையில், உக்கடம் மக்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் உக்கடம் பகுதியில் கட்டப்படும் பாலம் குறித்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரஸ் கிளப் அரங்கில் செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....