கோவை: உக்கடம் பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்காக குடியிருப்பு பகுதிகளை அகற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 18-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக மக்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு கூட்டியக்கம் அறிவித்துள்ளது.
கோவை : உக்கடம் பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்காக குடியிருப்பு பகுதிகளை அகற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 18-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக உக்கடம் மக்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு கூட்டியக்கம் அறிவித்துள்ளது.

உக்கடம் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ஒப்பணக்கார வீதி முதல் ஆத்துப்பாலம் வரை உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. பாலம் அமையவிருக்கும் பகுதி அருகே 1000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. பாலம் கட்டுமானப் பணிகளுக்காக இந்தக் குடியிருப்புகளை அப்புறப்படுத்தக் குடிசை மாற்று வாரியம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதனைக் கண்டித்து, உக்கடம் மக்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் வரும் 18-ம் தேதி உக்கடம் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. இந்தப் போராட்டத்தில், கூட்டியக்கத்தில் அங்கம் வகிக்கும் தந்தை பெரியார் திராவிடக் கழகம், திராவிட விடுதலை கட்சி, ஆதித் தமிழர் பேரவை, பீபுள் ஃப்ராண்ட் ஆஃப் இந்தியா ஆகிய அமைப்புகள் பங்கேற்க இருக்கின்றன.

இந்த நிலையில், உக்கடம் மக்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் உக்கடம் பகுதியில் கட்டப்படும் பாலம் குறித்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரஸ் கிளப் அரங்கில் செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.