மனநலம் பாதித்த பெண்ணுக்கு சீமந்தம் செய்து மகிழ்வித்த ஈர நெஞ்சம் அறக்கட்டளை

கோவை: கோவையைச் சேர்ந்த ஈர நெஞ்சம் அறக்கட்டளையினர், மனநலம் பாதித்த ஆதரவற்ற பெண் ஒருவருக்கு சீமந்தம் செய்து மகிழ்வித்த சம்பவம் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.


கோவை: கோவையைச் சேர்ந்த ஈர நெஞ்சம் அறக்கட்டளையினர், மனநலம் பாதித்த ஆதரவற்ற பெண் ஒருவருக்கு சீமந்தம் செய்து மகிழ்வித்த சம்பவம் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.



கோவையை மையமாகக் கொண்டு ஈர நெஞ்சம் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. ஆர்.எஸ்.புரம் பகுதியில் முதியோர் காப்பகத்தை நிர்வகித்து வரும் இந்த அறக்கட்டளையினர், அவ்வப்போது மனதை நெகிழ வைக்கும் உதவிகளைச் செய்து வருகின்றனர். 

இதுவரை, ஆதரவின்றி தனித்துவிடப்பட்ட முதியவர்களை மீட்டு, அவர்களுக்கு நல்வாழ்வு அளித்துள்ளனர். அதோடு, குடும்பத்தில் இருந்து எதேர்ச்சையாக பிரிந்துவிட்ட முதியவர்களை அவர்களது குடும்பத்துடனேயே சேர்த்தும் வைத்தனர்.

இந்த சூழலில் தான், மனநலம் பாதித்த ஆதரவற்ற பெண் ஒருவருக்கு சீமந்தம் செய்து மகிழ்வித்துள்ளது ஈர நெஞ்சம்.



ஆதரவு

கோவில்பாளையம் பகுதியில் செயல்படும் தனியார் மில் ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்தார் ராஜலட்சுமி என்ற 21 வயது பெண். தாய்-தந்தை அரவணைப்பில்லாத இவருக்கு மனநலம் பாதிக்க சிறுவயதில் இருந்தே தனது உறவினர்களின் நிழலில் வளர்ந்துள்ளார். 

இவரது வெகுளித்தனத்தைப் பயன்படுத்தி, தனியார் மில்லில் பணியாற்றிய ஒரு நபர் ராஜலட்சுமியை கர்பமாக்க, குரல்கொடுக்க ஆதரவின்றி தனித்து விடப்பட்டார். இது குறித்து அவர் தரப்பில் போலீசாரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று கூறப்படுகிறது. 

இந்த சூழலில் தான், ஈரநெஞ்சம் ராஜலட்சுமிக்கு ஆதரவுக் கரம் நீட்டியது. 7 மாத கர்ப்பிணியான ராஜலட்சுமி தற்போது ஈர நெஞ்சம் நிர்வகிக்கும் முதியோர் காப்பகத்தில் வாழ்கிறார். 

இதுகுறித்து ஈர நெஞ்சத்தை சேர்ந்த மகேந்திரன் கூறுகையில், "ஒரு ஆதரவற்ற மற்றும் மனநலம் பாதித்த பெண்ணால், குழந்தையைப் பெற்றெடுத்து வளர்ப்பது கடினம். 

ராஜலட்சுமியை கருக்கலைப்பு செய்ய கூறி அவரது உறவினர்கள் வலியுறுத்திய போதும், தான் சுமக்கும் குழந்தை மீது அளவு கடந்த பாசம் வைத்து, கருக்கலைப்பு செய்ய மறுத்தார். 

இந்த திடகாத்திரமான மனமே, அவரை ஒரு நல்ல அன்னையாக மாற்றும் என்று நினைக்கிறோம். அவரது குழந்தை நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவரை பாதுகாக்க உள்ளோம்." என்றார்.

சீமந்தம்

நிறைமாத கர்ப்பிணிக்கு சீமந்தம் செய்து அவர் மனதை குளிர்விப்பது நம் சமுதாயத்தில் வழக்கமாக நடைபெறும் ஒரு நிகழ்ச்சி. ஆதரவளித்ததோடு அல்லாமல், ஒரு படி மேலே சென்று ராஜலட்சுமிக்கு சீமந்தம் செய்து அழகு பார்த்துள்ளனர் நெஞ்சில் ஈரம் கொண்ட ஈர நெஞ்சத்தினர். 



அதன்படி, நேற்று (திங்கட்கிழமை), அந்த முதியோர் காப்பகத்திலேயே அவருக்கு சீமந்தம் நடைபெற்றது. பழங்களும், பூக்களும் நிரம்பிய தட்டுக்களுடன், அங்குள்ள முதியவர்களின் ஆசியுடன் நடைபெற்றது அந்த ஆதரவற்ற பெண்ணின் சீமந்தம்.



இந்த நிகழ்வு, ராஜலட்சுமியை மட்டுமல்லாது, மக்கள் மனதையும் குளிர்வித்துள்ளது.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....