சோமனூர் பேருந்துநிலைய மேற்கூரை இடிந்த விபத்து : இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி காயமடைந்தவர்கள் மனு

கோவை : சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் படுகாயமடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.


கோவை : சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் படுகாயமடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கோவையை அடுத்த சோமனூரில் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 25 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 4 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000-ம் லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 25,000-ம் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து அமைக்கப்பட்ட ஒருநபர் விசாரணை ஆணையம், இன்னமும் அறிக்கை தாக்கல் செய்யப்படாத நிலையில், காயமடைந்தவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு போதுமானதாக இல்லை என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.



குறிப்பாக, விபத்தில் காயமடைந்த லதா என்ற கல்லூரி மாணவிக்கு கால் ஒன்று அகற்றப்பட்டதோடு, இதுவரை ரூ. 10 லட்சம் வரை செலவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த பேருந்து மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில், படுகாயமடைந்து தற்போதும் சிகிச்சை பெற்று வரும் 7 பேர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில், 'படுகாயமடைந்தவர்கள் இன்றும் உடல்நிலை தேராமல் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். எனவே, தங்களுக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்குவதோடு, அரசு வேலையும் வழங்க வேண்டும்,' என வலியுறித்தியுள்ளனர். 

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....