திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே குடிபோதையில் தகராறு செய்த தந்தையை உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே குடிபோதையில் தகராறு செய்த தந்தையை உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
பல்லடம் அரசு மருத்துவமனை ராசாக்கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி அருணாச்சலம் (65). இவருக்கு தெய்வாத்தாள் என்ற மனைவியும், சித்ராதேவி என்ற மகளும், முருகேசன் என்ற மகனும் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான அருணாச்சலம், தினமும் குடித்துவிட்டு வீட்டிற்குச் சென்று குடும்பத்தினருடன் தகராறு செய்வது வழக்கம். பிரச்சனையின் போதெல்லாம், அக்கம்பக்கத்தினர், தலையிட்டு குடும்பத்தினரை சமாதானம் செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்றிரவு வழக்கம் போல் மதுகுடித்துவிட்டு வீட்டிற்குச் சென்ற அருணாச்சலம், குடும்பத்தினரிடம் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனை வீட்டிலிருந்த மகன் முருகேசன் கண்டித்துள்ளார். அப்போது, தந்தை, மகனுக்கு இடையே வாக்குவாதம் முற்றிக் கைகலப்பாக மாறியது. இதில், ஆத்திரமடைந்த முருகேசன், வீட்டருகே கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து தந்தையை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், படுகாயமடைந்த அருணாச்சலம் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு அவரின் உடலைப் பரிசோதித்த அரசு மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.
இச்சம்பவம், குறித்து தகவலறிந்த பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகேசனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பல்லடம் அருகே குடிபோதையில் குடும்பத்தினரிடம் தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்த தந்தையைப் பெற்ற மகனே அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல்லடம் அரசு மருத்துவமனை ராசாக்கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி அருணாச்சலம் (65). இவருக்கு தெய்வாத்தாள் என்ற மனைவியும், சித்ராதேவி என்ற மகளும், முருகேசன் என்ற மகனும் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான அருணாச்சலம், தினமும் குடித்துவிட்டு வீட்டிற்குச் சென்று குடும்பத்தினருடன் தகராறு செய்வது வழக்கம். பிரச்சனையின் போதெல்லாம், அக்கம்பக்கத்தினர், தலையிட்டு குடும்பத்தினரை சமாதானம் செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்றிரவு வழக்கம் போல் மதுகுடித்துவிட்டு வீட்டிற்குச் சென்ற அருணாச்சலம், குடும்பத்தினரிடம் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனை வீட்டிலிருந்த மகன் முருகேசன் கண்டித்துள்ளார். அப்போது, தந்தை, மகனுக்கு இடையே வாக்குவாதம் முற்றிக் கைகலப்பாக மாறியது. இதில், ஆத்திரமடைந்த முருகேசன், வீட்டருகே கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து தந்தையை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், படுகாயமடைந்த அருணாச்சலம் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு அவரின் உடலைப் பரிசோதித்த அரசு மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.
இச்சம்பவம், குறித்து தகவலறிந்த பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகேசனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பல்லடம் அருகே குடிபோதையில் குடும்பத்தினரிடம் தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்த தந்தையைப் பெற்ற மகனே அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.