சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய ராமலிங்கம் நகர் மக்கள்

கோவை: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவை ராமலிங்கம் நகர் பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

கோவை: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவை ராமலிங்கம் நகர் பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

கடந்த 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு அன்றைய தினமே, அந்த பகுதியில் பராமரிப்பின்றி இருந்த பொது இடத்தை பூங்காவாக மாற்றும் வகையில் அங்கு மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

தொடர்ந்து, சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை இன்று நடத்தினர். மேலும், அப்பகுதியை சேர்ந்த மக்களுக்கென இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.



இதில் கோயம்புத்தூர் சுற்றுச்சூழல் அமைப்பின் நிறுவனர் ஜனார்த்தனன் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டு, அப்பகுதியில் உள்ள பூங்கா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணியினை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், சுற்றுப்புறத்தில் மரம் நடுவதன் அவசியம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பேசப்பட்டது. மேலும், சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்ற உறுதி மொழியை அப்பகுதி மக்கள் எடுத்துக்கொண்டனர்.



கடந்த வருடம் குப்பை மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்டு 'குப்பையில்லாத குடியிருப்பு பகுதி' என ராமலிங்க நகர் காலனி பெயர் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....