வால்பாறையில் கன மழை தமிழக கேரள சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

வால்பாறை: வால்பாறையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் சாலைகளில் மண் சரிந்து சேதமடைந்தன.

வால்பாறை: வால்பாறையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் சாலைகளில் மண் சரிந்து சேதமடைந்தன.

மழை காரணமாக வால்பாறை நகரை ஒட்டிச் செல்லும் நடுமலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பணி பாதிப்படைந்தது.



சிறுவர் பூங்கா பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது. மேலும், நகராட்சி சுற்றுலா மாளிகையை வெள்ளம் சூழ்ந்தது. வால்பாறையிலிருந்து சோலையார் அணை வழியாக கேரள செல்லும் மாநில நெடுஞ்சாலையில் நேற்று காலை 11 மணியளவில் வறட்டுப்பாறை என்ற இடத்தில் கொண்டை ஊசி வளைவு அருகே மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.

இதன் காரணமாக மேற்பகுதியில் இருந்து ராட்சத மரங்கள் மற்றும் ராட்சத பாறைகள் சாலையில் விழுந்தன. மேலும், ஏராளமான மண் மற்றும் கற்கள் சாலையின் மேல் விழுந்து சாலையை மூடின.



வார இறுதி நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் இச்சாலையில் சென்ற வண்ணம் இருந்தன. இருப்பினும் மண் சரிவு ஏற்பட்ட நேரத்தில் வாகனங்கள் செல்லாததால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன. இதே போல் சோலையார் அணைக்குச் செல்லும் மாற்றுப்பாதையான பன்னிமேடு சாலையிலும் மண் சரிவு ஏற்பட்டதால் சோலையார் அணை பகுதி பல மணி நேரம் வால்பாறையிலிருந்து துண்டிக்கப்பட்டது.

இதனால் மக்கள் சுற்றுலா பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். தொடர்ந்து, நெடுஞ்சாலைத் துறையினர் ஜே.சி பி மூலம் சாலையில் கிடக்கும் மண் கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....