வால்பாறை: வால்பாறையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் சாலைகளில் மண் சரிந்து சேதமடைந்தன.
வால்பாறை: வால்பாறையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் சாலைகளில் மண் சரிந்து சேதமடைந்தன.
மழை காரணமாக வால்பாறை நகரை ஒட்டிச் செல்லும் நடுமலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பணி பாதிப்படைந்தது.

சிறுவர் பூங்கா பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது. மேலும், நகராட்சி சுற்றுலா மாளிகையை வெள்ளம் சூழ்ந்தது. வால்பாறையிலிருந்து சோலையார் அணை வழியாக கேரள செல்லும் மாநில நெடுஞ்சாலையில் நேற்று காலை 11 மணியளவில் வறட்டுப்பாறை என்ற இடத்தில் கொண்டை ஊசி வளைவு அருகே மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.
இதன் காரணமாக மேற்பகுதியில் இருந்து ராட்சத மரங்கள் மற்றும் ராட்சத பாறைகள் சாலையில் விழுந்தன. மேலும், ஏராளமான மண் மற்றும் கற்கள் சாலையின் மேல் விழுந்து சாலையை மூடின.

வார இறுதி நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் இச்சாலையில் சென்ற வண்ணம் இருந்தன. இருப்பினும் மண் சரிவு ஏற்பட்ட நேரத்தில் வாகனங்கள் செல்லாததால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன. இதே போல் சோலையார் அணைக்குச் செல்லும் மாற்றுப்பாதையான பன்னிமேடு சாலையிலும் மண் சரிவு ஏற்பட்டதால் சோலையார் அணை பகுதி பல மணி நேரம் வால்பாறையிலிருந்து துண்டிக்கப்பட்டது.
இதனால் மக்கள் சுற்றுலா பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். தொடர்ந்து, நெடுஞ்சாலைத் துறையினர் ஜே.சி பி மூலம் சாலையில் கிடக்கும் மண் கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மழை காரணமாக வால்பாறை நகரை ஒட்டிச் செல்லும் நடுமலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பணி பாதிப்படைந்தது.

சிறுவர் பூங்கா பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது. மேலும், நகராட்சி சுற்றுலா மாளிகையை வெள்ளம் சூழ்ந்தது. வால்பாறையிலிருந்து சோலையார் அணை வழியாக கேரள செல்லும் மாநில நெடுஞ்சாலையில் நேற்று காலை 11 மணியளவில் வறட்டுப்பாறை என்ற இடத்தில் கொண்டை ஊசி வளைவு அருகே மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.
இதன் காரணமாக மேற்பகுதியில் இருந்து ராட்சத மரங்கள் மற்றும் ராட்சத பாறைகள் சாலையில் விழுந்தன. மேலும், ஏராளமான மண் மற்றும் கற்கள் சாலையின் மேல் விழுந்து சாலையை மூடின.

வார இறுதி நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் இச்சாலையில் சென்ற வண்ணம் இருந்தன. இருப்பினும் மண் சரிவு ஏற்பட்ட நேரத்தில் வாகனங்கள் செல்லாததால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன. இதே போல் சோலையார் அணைக்குச் செல்லும் மாற்றுப்பாதையான பன்னிமேடு சாலையிலும் மண் சரிவு ஏற்பட்டதால் சோலையார் அணை பகுதி பல மணி நேரம் வால்பாறையிலிருந்து துண்டிக்கப்பட்டது.
இதனால் மக்கள் சுற்றுலா பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். தொடர்ந்து, நெடுஞ்சாலைத் துறையினர் ஜே.சி பி மூலம் சாலையில் கிடக்கும் மண் கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.