திருப்பூரில் வெறிநாய் கடித்ததில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

திருப்பூர்: திருப்பூரில் வெறிநாய் கடித்ததில் படுகாயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூரில் வெறிநாய் கடித்ததில் படுகாயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

போயம்பாளையம் பகுதியில் உள்ள முருகன் என்பவர் நாட்டு நாய் வளர்த்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை வீட்டில் கட்டப்பட்டிருந்த நாய் திடிரென சங்கிலியில் இருந்து கழன்று தெருவில் இறங்கியுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக சாலையில் நடந்து சென்றவர்களை நோக்கி பாய்ந்துள்ளது. இதனை எதிர்பாராத பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

இருப்பினும் நாய் அப்பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்டோரை கடித்தது. இதில் காயமடைந்தார்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். படுகாயமடைந்த பெண்கள் இருவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.



நாய் மீது ஆத்திரமடைந்த பொதுமக்கள் அப்பகுதியிலேயே அடித்துக் கொன்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...