திருப்பூர்: திருப்பூரில் வெறிநாய் கடித்ததில் படுகாயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருப்பூர்: திருப்பூரில் வெறிநாய் கடித்ததில் படுகாயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போயம்பாளையம் பகுதியில் உள்ள முருகன் என்பவர் நாட்டு நாய் வளர்த்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை வீட்டில் கட்டப்பட்டிருந்த நாய் திடிரென சங்கிலியில் இருந்து கழன்று தெருவில் இறங்கியுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக சாலையில் நடந்து சென்றவர்களை நோக்கி பாய்ந்துள்ளது. இதனை எதிர்பாராத பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இருப்பினும் நாய் அப்பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்டோரை கடித்தது. இதில் காயமடைந்தார்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். படுகாயமடைந்த பெண்கள் இருவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாய் மீது ஆத்திரமடைந்த பொதுமக்கள் அப்பகுதியிலேயே அடித்துக் கொன்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
