கோவையில் விஷம் கலந்த பிரியாணியை உண்ட 15 நாய்கள் உயிரிழப்பு

கோவை: விஷம் கலந்த பிரியாணியை மர்ம நபர்கள் சிலர் நாய்களுக்கு கொடுத்ததில் 15 நாய்கள் உயிரிழந்தன.

கோவை: விஷம் கலந்த பிரியாணியை மர்ம நபர்கள் சிலர் நாய்களுக்கு கொடுத்ததில் 15 நாய்கள் உயிரிழந்தன.



வடவள்ளியை அடுத்த நவாவூர் பிரிவில் உயிரிழந்த ஐந்து நாய்களின் உடலுக்கு தீ வைக்கப்பட்டிருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்தனர். அந்த பகுதியில், இது போன்று கடந்த சில நாட்களில் மட்டும் 15 நாய்கள் உயிரிழந்ததாகவும், அவை எரிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விஷத்தை கொடுத்தவர்கள் அதற்கான தடயங்களை அழிப்பதற்காவே நாய்களின் உடல்களுக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக பணியாற்றும் ஒருவர் கூறுகையில், "கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு நபர் நாய்களுக்கு பிரியாணியை வழங்குவதைப் பார்த்தேன். வழங்கியது போக மீதமுள்ள பிரியாணியை அவர் எரித்துவிட்டுச் சென்றார்.



நாய்களுக்கு சாப்பிட்டது போக மீதமிருந்த உணவை சுவைத்த காகங்களும் அடுத்தடுத்து உயிரிழந்தன." என்றார். இது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.



Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....