கோவை: கோவையில் ரத்த ஸ்டெம் செல்களை தானம் செய்தவர்களுக்கு பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி மற்றும் தாத்ரி தொண்டு நிறுவனத்தின் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
கோவை: கோவையில் ரத்த ஸ்டெம் செல்களை தானம் செய்தவர்களுக்கு பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி மற்றும் தாத்ரி தொண்டு நிறுவனத்தின் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

நவீன மருத்துவத்தின் மற்றொரு மைல்கல்லாக கருதப்படுவது 'ஸ்டெம் செல்' தானமாகும். கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் தாத்ரி என்ற தொண்டு நிறுவனம், ரத்த ஸ்டெம் செல்களை தானம் செய்ய முன்வருபவர்களைப் பதிவு செய்து வருகிறது. சுமார் 3,47,000 ஸ்டெம் செல் நன்கொடையாளர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 393 பேர் தானம் செய்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளில் ஆண்டனி ராபின்ஸ், சதீஷ் குமார் விஸ்வநாதன், ஏ.கண்ணன், வி. நந்தக்குமார், எம். சுப்ரமணி, எஸ். தாமோதரன் ஆகியோர் ரத்த ஸ்டெம் செல்களை தானம் அளித்துள்ளனர். அவர்களுக்கான பாராட்டு விழா கோவையில் நடைபெற்றது. இதில், பி.எஸ்.ஜி கல்விக் குழுமத்தின் தலைவர் எஸ். ராமலிங்கம், தாத்ரி தொண்டு நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ரகு ராஜகோபால் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு அவர்களுக்குப் பாராட்டுக்களை தெரிவித்தனர்.


நவீன மருத்துவத்தின் மற்றொரு மைல்கல்லாக கருதப்படுவது 'ஸ்டெம் செல்' தானமாகும். கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் தாத்ரி என்ற தொண்டு நிறுவனம், ரத்த ஸ்டெம் செல்களை தானம் செய்ய முன்வருபவர்களைப் பதிவு செய்து வருகிறது. சுமார் 3,47,000 ஸ்டெம் செல் நன்கொடையாளர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 393 பேர் தானம் செய்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளில் ஆண்டனி ராபின்ஸ், சதீஷ் குமார் விஸ்வநாதன், ஏ.கண்ணன், வி. நந்தக்குமார், எம். சுப்ரமணி, எஸ். தாமோதரன் ஆகியோர் ரத்த ஸ்டெம் செல்களை தானம் அளித்துள்ளனர். அவர்களுக்கான பாராட்டு விழா கோவையில் நடைபெற்றது. இதில், பி.எஸ்.ஜி கல்விக் குழுமத்தின் தலைவர் எஸ். ராமலிங்கம், தாத்ரி தொண்டு நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ரகு ராஜகோபால் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு அவர்களுக்குப் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
