கோவை : தென்மேற்கு பருவ மழையையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கோவை : தென்மேற்கு பருவ மழையையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, குடிசை மாற்று வாரியம், கோவை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களான கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, இ.எஃப்.ஐ., கோயமுத்தூர் மற்றும் குயிப்பைச் சேர்ந்த தன்னார்வலர்களும் கலந்து கொண்டனர்.

அப்போது, சித்திரைச்சாவடி வாய்க்காலில் இருந்து வரக்கூடிய முதல் குளங்களான புதுக்குளம் மற்றும் கோளரம்பதி குளங்களின் வாய்க்கால் சுருங்கியிருப்பது தொடர்பான கோரிக்கையை ஏற்று அகலப்படுத்தி மதகுகளை தூர்வாரி சரிசெய்வதாக பொதுப்பணித்துறை பொறுப்பெடுத்துக் கொண்டது.
கிருஷ்ணம்பதி, செல்வம்பதி, முத்தனன் குளம் மற்றும் செல்வ சிந்தாமணி குளம் நிரம்பியிருப்பதால், சித்திரைச்சாவடி வாய்க்காலில் சிறு தடுப்பு ஏற்படுத்தி நரசம்பதி குளத்திற்கு தண்ணீர் திருப்ப நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

மேலும், செல்வசிந்தாமணி - உக்கடம் குளத்திற்கு தண்ணீர் செல்லும் கோயமுத்தூர் வாய்க்காலில் தூர்வாரவும், வெள்ளலூர் குளத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் போது எடுக்கப்பட்ட கழிவுகளை அகற்ற கோவை மாநகராட்சிக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். வெள்ளலூர் குளத்தில் உள்ள 200 வீடுகள் ஆக்கிரமிப்பினை தென்மேற்கு பருவமழைக்கு முன்பாக அகற்ற துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு குடிசைமாற்று வாரியத்திற்கும் அறிவுறுத்தியுள்ளார்.
தென்மேற்கு பருவமழைக்கு முன்பாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், குளங்களில் நீர் நிரப்பவும், நிரம்பிய குளங்களில் இருந்து நீர் வெளியேற தேவையான அதன் வழிகளையும் சரி செய்ய எல்லா வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், சிங்காநல்லூர் குளத்திலிருந்து தண்ணீர் வெளியேறும் பகுதிகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய் துறைக்கும், அதன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மழைக்கு முன்பாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறைகளை முடுக்கிவிட்டுள்ளார். தொண்டு நிறுவனங்களின் சார்பாக மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக துளசி செடி பரிசாக கொடுக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, குடிசை மாற்று வாரியம், கோவை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களான கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, இ.எஃப்.ஐ., கோயமுத்தூர் மற்றும் குயிப்பைச் சேர்ந்த தன்னார்வலர்களும் கலந்து கொண்டனர்.

அப்போது, சித்திரைச்சாவடி வாய்க்காலில் இருந்து வரக்கூடிய முதல் குளங்களான புதுக்குளம் மற்றும் கோளரம்பதி குளங்களின் வாய்க்கால் சுருங்கியிருப்பது தொடர்பான கோரிக்கையை ஏற்று அகலப்படுத்தி மதகுகளை தூர்வாரி சரிசெய்வதாக பொதுப்பணித்துறை பொறுப்பெடுத்துக் கொண்டது.
கிருஷ்ணம்பதி, செல்வம்பதி, முத்தனன் குளம் மற்றும் செல்வ சிந்தாமணி குளம் நிரம்பியிருப்பதால், சித்திரைச்சாவடி வாய்க்காலில் சிறு தடுப்பு ஏற்படுத்தி நரசம்பதி குளத்திற்கு தண்ணீர் திருப்ப நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

மேலும், செல்வசிந்தாமணி - உக்கடம் குளத்திற்கு தண்ணீர் செல்லும் கோயமுத்தூர் வாய்க்காலில் தூர்வாரவும், வெள்ளலூர் குளத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் போது எடுக்கப்பட்ட கழிவுகளை அகற்ற கோவை மாநகராட்சிக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். வெள்ளலூர் குளத்தில் உள்ள 200 வீடுகள் ஆக்கிரமிப்பினை தென்மேற்கு பருவமழைக்கு முன்பாக அகற்ற துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு குடிசைமாற்று வாரியத்திற்கும் அறிவுறுத்தியுள்ளார்.
தென்மேற்கு பருவமழைக்கு முன்பாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், குளங்களில் நீர் நிரப்பவும், நிரம்பிய குளங்களில் இருந்து நீர் வெளியேற தேவையான அதன் வழிகளையும் சரி செய்ய எல்லா வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், சிங்காநல்லூர் குளத்திலிருந்து தண்ணீர் வெளியேறும் பகுதிகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய் துறைக்கும், அதன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மழைக்கு முன்பாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறைகளை முடுக்கிவிட்டுள்ளார். தொண்டு நிறுவனங்களின் சார்பாக மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக துளசி செடி பரிசாக கொடுக்கப்பட்டது.