தென்மேற்கு பருவமழைக்கு ஆயத்தமாவது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்

கோவை : தென்மேற்கு பருவ மழையையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவை : தென்மேற்கு பருவ மழையையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, குடிசை மாற்று வாரியம், கோவை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களான கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, இ.எஃப்.ஐ., கோயமுத்தூர் மற்றும் குயிப்பைச் சேர்ந்த தன்னார்வலர்களும் கலந்து கொண்டனர்.

 



அப்போது, சித்திரைச்சாவடி வாய்க்காலில் இருந்து வரக்கூடிய முதல் குளங்களான புதுக்குளம் மற்றும் கோளரம்பதி குளங்களின் வாய்க்கால் சுருங்கியிருப்பது தொடர்பான கோரிக்கையை ஏற்று அகலப்படுத்தி மதகுகளை தூர்வாரி சரிசெய்வதாக பொதுப்பணித்துறை பொறுப்பெடுத்துக் கொண்டது.

 கிருஷ்ணம்பதி, செல்வம்பதி, முத்தனன் குளம் மற்றும் செல்வ சிந்தாமணி குளம் நிரம்பியிருப்பதால், சித்திரைச்சாவடி வாய்க்காலில் சிறு தடுப்பு ஏற்படுத்தி நரசம்பதி குளத்திற்கு தண்ணீர் திருப்ப நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. 



மேலும், செல்வசிந்தாமணி - உக்கடம் குளத்திற்கு தண்ணீர் செல்லும் கோயமுத்தூர் வாய்க்காலில் தூர்வாரவும், வெள்ளலூர் குளத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் போது எடுக்கப்பட்ட கழிவுகளை அகற்ற கோவை மாநகராட்சிக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். வெள்ளலூர் குளத்தில் உள்ள 200 வீடுகள் ஆக்கிரமிப்பினை தென்மேற்கு பருவமழைக்கு முன்பாக அகற்ற துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு குடிசைமாற்று வாரியத்திற்கும் அறிவுறுத்தியுள்ளார்.

தென்மேற்கு பருவமழைக்கு முன்பாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், குளங்களில் நீர் நிரப்பவும், நிரம்பிய குளங்களில் இருந்து நீர் வெளியேற தேவையான அதன் வழிகளையும் சரி செய்ய எல்லா வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், சிங்காநல்லூர் குளத்திலிருந்து தண்ணீர் வெளியேறும் பகுதிகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய் துறைக்கும், அதன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மழைக்கு முன்பாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறைகளை முடுக்கிவிட்டுள்ளார். தொண்டு நிறுவனங்களின் சார்பாக மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக துளசி செடி பரிசாக கொடுக்கப்பட்டது. 

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....