கோவையில் ரூ.60 லட்சம் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல்

கோவை: பீளமேடு பகுதியில் உள்ள சர்வீஸ் அபார்ட்மென்ட்டில் ரூ.60 லட்சம் மதிப்பிலான பழைய 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


கோவை: பீளமேடு பகுதியில் உள்ள சர்வீஸ் அபார்ட்மென்ட்டில் ரூ.60 லட்சம் மதிப்பிலான பழைய 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பீளமேடு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான சர்வீஸ் அபார்ட்மென்ட் உள்ளது. அங்கு வெங்கடேஷ் என்பவர் போக்கியத்திற்கு எடுத்திருந்த வீட்டில், தஸ்தகீர் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். 

இந்த நிலையில், இன்று காலை அவரிடம் வாடகை வசூலிப்பதற்காக வெங்கடேஷ் சென்றுள்ளார். ஆனால், அப்போது தஸ்தகீர் அங்கு இல்லை. மேலும், அங்கு கட்டு கட்டாக பழைய 1000 ரூபாய் நோட்டுகள் இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வெங்கடேஷ் பீளமேடு போலீசாரிடம் புகார் அளித்தார். 

இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், ரூ. 60 லட்சம் மதிப்பிலான பழைய 1,000 நோட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும், தஸ்தகீரின் காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

முதற்கட்ட விசாரணையில் தஸ்தகீர் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. அவர் யார்? எதற்காக கோவை வந்தார்? பழைய ரூபாய் நோட்டுகள் யாருடையது? என்பதெல்லாம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....