கோவை: மேம்பாலப் பணிகள் நடைபெறுவதைத் தொடர்ந்து உக்கடம்-ஆத்துப்பாலம் வரையில் போக்குவரத்து மாற்றம் செய்து மாநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
கோவை: மேம்பாலப் பணிகள் நடைபெறுவதைத் தொடர்ந்து உக்கடம்-ஆத்துப்பாலம் வரையில் போக்குவரத்து மாற்றம் செய்து மாநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
உக்கடம் பகுதியில் மேம்பாலம் பணிகள் தொடங்க உள்ளது. இதன் காரணமாக, ஆத்துப்பாலம் முதல் உக்கடம் வரையில் அமைக்கப்பட்டுள்ள சாலையோர கடைகளை தற்காலிகமாக அகற்றிட வேண்டும் என்று போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், லாரிகள் நகரத்திற்குள் புகுவதிலும் மாற்றங்களை செய்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை உக்கடம் போலீசார் சாலையோர வியாபாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அவ்வாறு, லாரிப்பேட்டை மற்றும் உக்கடம் பகுதியில் கடைகள் அமைத்துள்ளவர்களை தற்காலிகமாக காலி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், "இன்று முதல் இந்த திட்டத்தை போலீசார் அமல்படுத்துவதாக கூறினார். எங்கள் வாழ்வாதாரத்திற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டிய நிலை உள்ளது. அதனால், போலீசார் சிறிது அவகாசம் அளிக்க வேண்டும்." என்றனர்.
போக்குவரத்து மாற்றம்
*திருச்சியில் சாலையில் இருந்து பொள்ளாச்சி சாலை செல்லும் லாரிகள் ராமநாதபுரத்தில் இருந்து போத்தனூர் செல்லும் சாலை மார்க்கமாகச் செல்ல வேண்டும்.

*இதே போல, பாலக்காடு சாலை, ஆத்துப்பாலம் செல்லும் லாரிகளும் அதே வழியைப் பின்பற்ற வேண்டும்.
*பொள்ளாச்சி சாலை மற்றும் பாலக்காடு சாலையில் இருந்து திருச்சி சாலை மற்றும், அவினாசி சாலைக்கு செல்லும் கனரக லாரிகள், டிப்பர் லாரிகள் போத்தனூரில் இருந்து ராமநாதபுரம் வழியாகச் சென்று திருச்சி சாலையை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்லலாம்.
*பாலக்காடு-ஊட்டி சாலை, மேட்டுப்பாளையம் செல்லும் லாரிகள், கோவைப்புதூர் பகுதியில் இடதுபுறமாகத் திரும்பி புட்டுவிக்கி சாலையை அடைந்து, பொன்னையராஜபுரம் வழியாகச் சென்று தடாகம் சாலையை அடையலாம்.
*உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து போத்தனூர், குனியமுத்தூர் செல்லும் பேருந்துகள் வழக்கமான பாதையில் இயங்கலாம்.
*உக்கடம் சந்திப்பில் இருந்து லாரிப்பேட்டை, ஆத்துப்பாலம் சந்திப்பு வரை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை லாரிகள், ஈச்சர் வாகனங்கள் செல்ல முற்றிலும் அனுமதி மறுக்கப்படுகிறது.
இவ்வாறு போலீசார் போக்குவரத்து மாற்றம் செய்துள்ளனர்.