காவிரி மேலாண்மை வாரியத்தின் அனுமதியின்றி அணை கட்ட முடியாது: உச்சநீதிமன்றம்

காவிரி மேலாண்மை வாரியத்தின் அனுமதியின்றி தமிழகம் மற்றும் கர்நாடகம் எந்தவித அணையும் கட்ட முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியத்தின் அனுமதியின்றி தமிழகம் மற்றும் கர்நாடகம் எந்தவித அணையும் கட்ட முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

காவிரி வழக்கு தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது, தமிழக அரசு தரப்பில் 3 முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. அவை, காவிரி தொடர்பான அமைப்பின் தலைமையகத்தை பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு மாற்ற வேண்டும். மத்திய அரசு உருவாக்க உள்ள காவிரி தொடர்பான அமைப்பிற்கு காவிரி மேலாண்மை வாரியம் என பெயர் வைக்க வேண்டும். இதனை உடனடியாக அரசிதழில் வெளியிட்டு அமல்படுத்த வேண்டும் என்பவையாகும்.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில், மத்திய அரசு உருவாக்க உள்ள காவிரி தொடர்பான அமைப்புக்கு காவிரி மேலாண்மை வாரியம் என பெயர் வைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கைக்கு கர்நாடக அரசும், மத்திய அரசும் ஒப்புதல் வழங்கியுள்ளது. காவிரி தொடர்பான அமைப்பின் தலைமையகத்தை பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு மாற்றவும் உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

கர்நாடகத்தில் அரசு அமைக்கும் முயற்சி நடைபெறுவதால் காவிரி வழக்கை ஜூலைக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கர்நாடக அரசு வாதம் செய்தது. காவிரி அமைப்பின் முடிவை மாநில அரசுகள் அமல்படுத்தவில்லை எனில் மத்திய அரசு இறுதி முடிவெடுக்கலாம் என்ற விதியை மாற்ற மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், காவிரி வரைவு செயல்திட்டத்தில் திருத்தம் செய்து தாக்கல் செய்ய நாளை வரை கால அவகாசம் வழங்கியுள்ளது.

காவிரி விவகாரத்தில் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் காவிரி மேலாண்மை வாரியத்துக்கு மட்டுமே உண்டு, மத்திய அரசுக்கு இல்லை. இதில், கர்நாடகா மற்றும் தமிழகம் மேலாண்மை வாரியத்தின் அனுமதியின்றி எந்த அணையும் கட்ட முடியாது. நீர்ப்பங்கீடு தொடர்பாக மத்திய அரசை காவிரி அமைப்பு அணுகத் தேவையில்லை. காவிரி மேலாண்மை வாரியத்தின் முடிவே இறுதியானது. காவிரி அமைப்பின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்க தமிழக அரசு தரப்பில் முக்கிய கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்றம் அதனை நிராகரித்துள்ளது. இதுதொடர்பான அடுத்த கட்ட நகர்வுகள் குறித்த வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்து உச்சநீதின்ற நீதபதி உத்தரவிட்டார்.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...