மாவட்ட ரீதியாக பிளஸ்-2 தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் 3-வது இடம்: ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு

திருப்பூர்: தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் மாவட்ட அளவில் திருப்பூர் 3-வது இடத்தை பிடித்துள்ள நிலையில், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் மாவட்ட அளவில் திருப்பூர் 3-வது இடத்தை பிடித்துள்ள நிலையில், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

12-ம் வகுப்புக்கான தேர்வெழுதிய மாணவர்களுக்கு இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்தத் தேர்வு முடிவுகளைப் செய்தியாளர்களிடம் தெரிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, அவர் கூறியதாவது :- தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் 3 இடத்தை திருப்பூர் மாவட்டம் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை 11,114 மாணவர்களும், 13,466 மாணவிகளும் உள்பட மொத்தம் 24,580 பேர் தேர்வெழுதினர். இதில், 10,530 மாணவர்கள், 13, 110 மாணவிகள் உள்பட மொத்தம் 23,640 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.



மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 94.75 சதவீதமும், மாணவிகள் 97.36 சதவீதமும் என சராசரியாக 96.18% ஆகும். கடந்த ஆண்டு பெறப்பட்ட 96.05 % காட்டிலும், 0.13 சதவீதம் அதிகம் பெற்றுள்ளது. அரசுப் பள்ளிகளை பொருத்த வரை 93.45 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாக தேர்வெழுதி தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன், எனக் கூறினார்.

மேலும், தேர்வு முடிவுகளை 9.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று இருந்த நிலையில், தேர்வு முடிவுகளை மாவட்ட ஆட்சியர் ஒருமணி நேரத்திற்கு பிறகே அறிவித்தது செய்தியாளர்கள் மற்றும் மாணவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...