கர்நாடகா முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் சித்தராமையா: முதலமைச்சராகிறார் குமாரசாமி..?

கர்நாடக அரசியல் திடீர் திருப்பமாக காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளன.

கர்நாடக அரசியல் திடீர் திருப்பமாக காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளன.

கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றது. பெரும்பான்மைக்கு தேவையான 122 தொகுதிகளை எந்த கட்சியும் கைப்பற்றவில்லை. அதிகபட்சமாக பா.ஜ.க., 106 இடங்களை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சி சுமதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 18-ல் வெற்றியும் 20-ல் முன்னிலையில் உள்ளது. இதனால், காங்கிரஸ் - ம.ஜ.த., இடையே கூட்டணி ஆட்சி அமைக்க உடன்பாடு ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் பதவியை ம.ஜ.த.,வுக்கும், துணை முதலமைச்சர் பதவி காங்கிரசுக்கும் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

20 அமைச்சர் பதவி காங்கிரசுக்கும், 16 ம.ஜ.த., கட்சிக்கும் பிரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தாண்டு நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலையும் கூட்டணி அமைத்து சந்திக்க உடன்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாலை 5.30 மணிக்கு ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளதாக ம.ஜ.த., மூத்த தலைவர் தானிஷ் அலி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, டெல்லியில் பா.ஜ.க., தலைவர் கர்நாடக தேர்தல் முடிவுகள் தொடர்பாக முக்கிய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர், அமைச்சர்கள் ரவிஷங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் மற்றும் ஜே.பி. நட்டா உடனடியாக பெங்களூர் புறப்பட்டுள்ளனர். இதனிடையே, கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலாவைச் சந்தித்து முதலமைச்சர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்தார்.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...