கர்நாடக அரசியல் திடீர் திருப்பமாக காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளன.
கர்நாடக அரசியல் திடீர் திருப்பமாக காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளன.
கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றது. பெரும்பான்மைக்கு தேவையான 122 தொகுதிகளை எந்த கட்சியும் கைப்பற்றவில்லை. அதிகபட்சமாக பா.ஜ.க., 106 இடங்களை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சி சுமதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 18-ல் வெற்றியும் 20-ல் முன்னிலையில் உள்ளது. இதனால், காங்கிரஸ் - ம.ஜ.த., இடையே கூட்டணி ஆட்சி அமைக்க உடன்பாடு ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் பதவியை ம.ஜ.த.,வுக்கும், துணை முதலமைச்சர் பதவி காங்கிரசுக்கும் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
20 அமைச்சர் பதவி காங்கிரசுக்கும், 16 ம.ஜ.த., கட்சிக்கும் பிரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தாண்டு நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலையும் கூட்டணி அமைத்து சந்திக்க உடன்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாலை 5.30 மணிக்கு ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளதாக ம.ஜ.த., மூத்த தலைவர் தானிஷ் அலி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, டெல்லியில் பா.ஜ.க., தலைவர் கர்நாடக தேர்தல் முடிவுகள் தொடர்பாக முக்கிய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர், அமைச்சர்கள் ரவிஷங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் மற்றும் ஜே.பி. நட்டா உடனடியாக பெங்களூர் புறப்பட்டுள்ளனர். இதனிடையே, கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலாவைச் சந்தித்து முதலமைச்சர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்தார்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றது. பெரும்பான்மைக்கு தேவையான 122 தொகுதிகளை எந்த கட்சியும் கைப்பற்றவில்லை. அதிகபட்சமாக பா.ஜ.க., 106 இடங்களை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சி சுமதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 18-ல் வெற்றியும் 20-ல் முன்னிலையில் உள்ளது. இதனால், காங்கிரஸ் - ம.ஜ.த., இடையே கூட்டணி ஆட்சி அமைக்க உடன்பாடு ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் பதவியை ம.ஜ.த.,வுக்கும், துணை முதலமைச்சர் பதவி காங்கிரசுக்கும் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
20 அமைச்சர் பதவி காங்கிரசுக்கும், 16 ம.ஜ.த., கட்சிக்கும் பிரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தாண்டு நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலையும் கூட்டணி அமைத்து சந்திக்க உடன்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாலை 5.30 மணிக்கு ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளதாக ம.ஜ.த., மூத்த தலைவர் தானிஷ் அலி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, டெல்லியில் பா.ஜ.க., தலைவர் கர்நாடக தேர்தல் முடிவுகள் தொடர்பாக முக்கிய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர், அமைச்சர்கள் ரவிஷங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் மற்றும் ஜே.பி. நட்டா உடனடியாக பெங்களூர் புறப்பட்டுள்ளனர். இதனிடையே, கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலாவைச் சந்தித்து முதலமைச்சர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்தார்.