கர்நாடகாவில் ஆட்சியமைப்பதில் குழப்பம்: காங்கிரசுடன் கைகோர்த்தது மதச்சார்பற்ற ஜனதா தளம்

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க., முன்னிலை பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற கட்சிக்கு இடையே கூட்டணிக்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளதால், அங்கு ஆட்சியமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க., முன்னிலை பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற கட்சிக்கு இடையே கூட்டணிக்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளதால், அங்கு ஆட்சியமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

கர்நாடக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது. மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து உள்ளது. இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலேயே பா.ஜ.க., பல தொகுதிகளில் முன்னிலை வகித்தது. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 104 இடங்களில் பா.ஜ.க., முன்னிலை வகிக்கிறது. அதற்கு அடுத்த இடத்தை 70-க்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. பா.ஜ.க., தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது.

இந்த நிலையில், பா.ஜ.க.,வின் வெற்றி உறுதியானது. இந்த நிலையில், கர்நாடகாவில் பா.ஜ.க., ஆட்சியமைப்பதை தடுக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் இடையே கூட்டணி அமைப்பதில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது, முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்கும்படி மதச்சார்பற்ற ஜனதா தளம் கோரிக்கை விடுத்துள்ளது. எனவே, ஆட்சியமைக்கப்போவது யார் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும், தேவகவுடாவும் சந்தித்து பேசுகின்றனர். இது கர்நாடக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த பிறகு, ஆட்சியமைப்பதற்கு தேவையான 112 இடங்களை பா.ஜ.க., பெறவில்லை எனில், காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா கட்சியும் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...