கோவை: இலங்கை இனப் படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தக் கோரி கோவையில் உள்ள கே.எப்.சி. நிறுவனத்தை முற்றுகையிட முயன்ற தமிழர் விடியல் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: இலங்கை இனப் படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தக் கோரி கோவையில் உள்ள கே.எப்.சி. நிறுவனத்தை முற்றுகையிட முயன்ற தமிழர் விடியல் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 2009-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற தமிழின படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த கோரி, மே மாதத்தை போராட்ட மாதமாக தமிழர் விடியல் கட்சியினர் அனுசரித்து வருகின்றனர். இனப் படுகொலையில் இந்தியா, அமெரிக்கா நாடுகளுக்கும் பங்கு இருப்பதாகவும், இந்நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் அக்கட்சியினர் தெரிவித்தனர். இந்த நிலையில், கோவை - அவினாசி சாலையில் உள்ள அமெரிக்க நிறுவனமான கே.எப்.சி.,யினை முற்றுகையிட முயன்றனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 26 பேரை போலீசார் கைது செய்தனர்.