மனநிலை பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கோவை: மனநிலை பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

கோவை: மனநிலை பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியைச் சேர்ந்த ராஜலட்சுமி என்ற இளம்பெண், கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியிலுள்ள தனியார் பஞ்சாலையில் தூய்மை பணி மேற்கொண்டு வருகிறார். மனநிலை சற்று பாதிக்கப்பட்ட அப்பெண்ணை அதே ஆலையில் பணியாளரான முனிராஜ் என்ற வாலிபர் ஆசைவார்த்தை கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதுபோன்று பலமுறை அவரை பலாத்காரம் செய்ததால், அந்தப் பெண் கருவுற்றுள்ளார். ஆனால், தான் கர்ப்பமானதை அறியாத அப்பெண் தொடர்ந்து ஆலையில் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பெண்ணிற்கு வயிற்று வலி ஏற்பட்டதால், அன்னூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, அவர் ஏழு மாதம் கருவுற்று இருப்பதை மருத்துவர் உறுதி செய்தார். இதைத்தொடர்ந்து, முனிராஜை கண்டறிந்து அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு சிலர் வற்புறுத்தியுள்ளனர். ஆனால், இதற்கு முனிராஜின் தாய் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால், பாதிக்கப்பட்ட ராஜலட்சுமி கோவை துடியலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது, அங்கிருந்த பெண் காவலர்கள் ராஜலட்சுமியை அறைந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தன்னை பலவந்தப்படுத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, கருவுறச் செய்த முனிராஜ் மீதும், புகார் அளிக்கச் சென்ற தன்னை தாக்கிய காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். மேலும், முனிராஜ் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை காட்டிவிட்டு, தற்போது தன்னை ஏமாற்ற முயற்சி செய்வதாகவும் அந்தப் பெண் கூறியுள்ளார்.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...