குட்கா வழக்கை திசை திருப்புகின்றனர் : நீதிமன்றத்தில் ஆஜரான எம்.எல்.ஏ., நா.கார்த்திக் பேட்டி

கோவை : குட்கா ஆலை வழக்கில் தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் சூலூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.

கோவை : குட்கா ஆலை வழக்கில் தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் சூலூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். 

சூலூரை அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் குட்கா தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. அந்த ஆலையில் போலீசார் சோதனை நடத்திய போது, அங்கு சென்று ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க., தொண்டர்கள் மற்றும் எம்.எல்.ஏ., நா.கார்த்திக் உட்பட 10 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். 

இந்த வழக்கில், நா.கார்த்திக் எம்.எல்.ஏ., மற்றும் தங்கராஜ் ஆகியோர் கோவை மாவட்ட விடுமுறை கால நீதிமன்றத்தில் ஏற்கனவே முன்ஜாமீன் பெற்றிருந்தனர். முன்ஜாமீனை அடுத்து சூலூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி வேடியப்பன் மறு உத்திரவு வரும் வரை இருவரையும் சூலூர் காவல் நிலையத்தில் தினமும், கையெழுத்து இட உத்தரவிட்டார். 

இதனைத் தொடர்ந்து நா.கார்த்திக் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கண்ணம்பாளையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட குட்கா ஆலை விவகாரத்தில், நியாயமான முறையில் போராடிய தி.மு.க.,வினர் மீது காவல் துறையினர் பொய் வழக்கு போட்டுள்ளனர். 

இதுதொடர்பாக, என் மீதும், பொய் வழக்கு போடப்பட்ட நிலையில் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று தற்போது சூலூர் நீதிமன்றத்தில் ஆஜராக வந்துள்ளேன். இதில், தி.மு.க.,விற்கு எந்தத் தொடர்பும் இல்லை. குட்கா தொழிற்சாலையில் சோதனை நடப்பதாக தகவல் கிடைத்து அங்கு சென்றேன். தி.மு.க.,வினர் அற வழியில் தான் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தி.மு.க., ஏற்கனவே தொடர்ந்த வழக்கில், கடந்த 27-ம் தேதி, குட்கா வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறியது. ஆனால், இது வரை நடவடிக்கைகள் எடுக்கவில்லை. இந்த வழக்கில் தொடர்புடைய அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கட்டங்களில் வலியுறுத்தி வருகிறோம். 

வழக்கை திசை திருப்பும் நோக்கில் ஜோடிக்கப்பட்ட வழக்குகள் எங்கள் மீது போடப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க பொய் வழக்கு, இதை மக்கள் நம்பத் தயாராக இல்லை." என்றார். 

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...