கோவையில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு

கோவையில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு


கோவை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், ஸ்டெர்லைட் ஆலையை மூடுதல், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை கைவிடுதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். 



அவர்களை போலீசார் தடுத்த போது, போராட்டத்தில் ஈடுபட்ட தனலட்சுமி என்ற பெண்ணை காவல் துறையினர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், கொதிப்படைந்த அவர்கள் காவல் துறையினருடன் வாக்குவாதம் நடத்தினர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 



இதைதொடர்ந்து, போராட்டத்தில் 40 பேரை போலீசார் இழுத்துச் சென்று கைது செய்தனர். 

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...