கோவையில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு
கோவை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், ஸ்டெர்லைட் ஆலையை மூடுதல், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை கைவிடுதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

அவர்களை போலீசார் தடுத்த போது, போராட்டத்தில் ஈடுபட்ட தனலட்சுமி என்ற பெண்ணை காவல் துறையினர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், கொதிப்படைந்த அவர்கள் காவல் துறையினருடன் வாக்குவாதம் நடத்தினர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதைதொடர்ந்து, போராட்டத்தில் 40 பேரை போலீசார் இழுத்துச் சென்று கைது செய்தனர்.