கோவை : பாரதியார் பல்கலைக்கழக மாணவியை ஆபாசமாக திட்டிய விவகாரத்தில் உளவியல் துறை தலைவர் வேலாயுதம் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்திய மாணவர் சங்கத்தினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.
கோவை : பாரதியார் பல்கலைக்கழக மாணவியை ஆபாசமாக திட்டிய விவகாரத்தில் உளவியல் துறை தலைவர் வேலாயுதம் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்திய மாணவர் சங்கத்தினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.
கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிதா. இவர் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை உளவியல் துறையில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். ஹரிதா பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் தங்கி படிப்பை தொடர்ந்து வந்தார். இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் 14-ம் தேதி விடுதியில் இருந்த சக மாணவிக்கு இரவு நேரத்தில் உடல்நிலை மோசமானது. இதனால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று விடுதி காப்பாளர் பிரேமாவிடம் கேட்டுள்ளார்.
அதற்கு பிரேமா பிரேமா மறுத்ததோடு, விடுதியைப் பூட்டியதாகவும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, விடுதி தலைமை காப்பாளர் தர்மராஜ் மற்றும் உளவியல் துறை தலைவர் வேலாயுதம் ஆகியோர் ஹரிதாவை வகுப்பறையில் சக மாணவிகள் முன்னிலையில் அவமானப்படுத்தியதாகவும், மேஜை மீது நிற்க வைத்து தண்டித்தாகவும் தெரிகிறது. மேலும், துறை தலைவர் வேலாயுதம் ஹரிதாவை தகாத வார்த்தைகளில் பேசிய திட்டியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக,வேலாயுதம், பிரேமா மற்றும் தலைமை விடுதி காப்பாளர் தர்மராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தமிழக ஆளுநர், காவல்துறை தலைவர், மனித உரிமை ஆணையம், கேரள முதலமைச்சர் உள்ளிட்டோரிடம் ஹரிதா புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் மீது வடவள்ளி காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்றது.
இந்த நிலையில், மாணவி ஹரிதா புகார் தொடர்பாக உளவியல் துறை தலைவர் வேலாயுதம் உள்ளிட்ட 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.
இது குறித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பிரபு கூறுகையில், "ஹரிதாவை ஆபாசமாக பேசிய உளவியல் துறை தலைவர் வேலாயுதம் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்யாமல் இழுத்தடித்து வருகின்றனர். முறையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை." என்றார்.
கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிதா. இவர் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை உளவியல் துறையில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். ஹரிதா பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் தங்கி படிப்பை தொடர்ந்து வந்தார். இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் 14-ம் தேதி விடுதியில் இருந்த சக மாணவிக்கு இரவு நேரத்தில் உடல்நிலை மோசமானது. இதனால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று விடுதி காப்பாளர் பிரேமாவிடம் கேட்டுள்ளார்.
அதற்கு பிரேமா பிரேமா மறுத்ததோடு, விடுதியைப் பூட்டியதாகவும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, விடுதி தலைமை காப்பாளர் தர்மராஜ் மற்றும் உளவியல் துறை தலைவர் வேலாயுதம் ஆகியோர் ஹரிதாவை வகுப்பறையில் சக மாணவிகள் முன்னிலையில் அவமானப்படுத்தியதாகவும், மேஜை மீது நிற்க வைத்து தண்டித்தாகவும் தெரிகிறது. மேலும், துறை தலைவர் வேலாயுதம் ஹரிதாவை தகாத வார்த்தைகளில் பேசிய திட்டியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக,வேலாயுதம், பிரேமா மற்றும் தலைமை விடுதி காப்பாளர் தர்மராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தமிழக ஆளுநர், காவல்துறை தலைவர், மனித உரிமை ஆணையம், கேரள முதலமைச்சர் உள்ளிட்டோரிடம் ஹரிதா புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் மீது வடவள்ளி காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்றது.
இந்த நிலையில், மாணவி ஹரிதா புகார் தொடர்பாக உளவியல் துறை தலைவர் வேலாயுதம் உள்ளிட்ட 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.
இது குறித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பிரபு கூறுகையில், "ஹரிதாவை ஆபாசமாக பேசிய உளவியல் துறை தலைவர் வேலாயுதம் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்யாமல் இழுத்தடித்து வருகின்றனர். முறையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை." என்றார்.