கோவை: ஆனைமலை புலிகள் காப்பகத்தில், கோடைகால வன உயிரினங்கள் கணக்கெடுப்பு பணி வரும் 21-ம் தேதி தொடங்குகிறது.
கோவை: ஆனைமலை புலிகள் காப்பகத்தில், கோடைகால வன உயிரினங்கள் கணக்கெடுப்பு பணி வரும் 21-ம் தேதி தொடங்குகிறது.

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, உலாந்தி, மானாம்பள்ளி, உடுமலை மற்றும் அமராவதி ஆகிய ஆறு வனச்சரகங்கள் உள்ளன. இங்கு, யானை, சிறுத்தை, புலி, புள்ளிமான், கடமான் உள்ளிட்ட பல்வேறு வன உயிரினங்கள் வசிக்கின்றன. வனப்பகுதியில் உள்ள விலங்குகளின் எண்ணிக்கையை ஆண்டுக்கு இருமுறை வனத்துறையினர் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஏப்., மே மாதங்களில் இப்பணி நடைபெறுகிறது.
இந்த நிலையில், கோடைகால வனஉயிரினங்கள் கணக்கெடுப்பு பணி வரும் 21-ம் தேதி தொடங்க இருக்கிறது. மே 28-ம் தேதி வரை நடக்கும் இப்பணியில் வேட்டைத் தடுப்பு காவலர்கள் உள்ளிட்ட வனத்துறையினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் ஈடுபட உள்ளனர். தொடக்க நாளில் புலி, சிறுத்தை, கரடி மற்றும் செந்நாயின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுக்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து, பிற நாட்களில் புலிகள் வேட்டையாடும் உயிரினங்களின் அடிப்படையில் வன உயிரின கணக்கெடுப்பு நடக்கிறது.