கோவை : வெள்ளலூர் குளத்தில் குப்பைகளை உரமாக இட்டு மரங்களை வளர்த்துள்ளனர் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர்.
கோவை : வெள்ளலூர் குளத்தில் குப்பைகளை உரமாக இட்டு மரங்களை வளர்த்துள்ளனர் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர்.

வெள்ளலூர் குளத்தில் மியாவாக்கி முறையில் அடர்த்தியாக மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. முன்னதாக, அந்த இடத்தில் அமைக்கப்பட்ட குழியில், பாதிக்கு சுமார் 150 டன் மக்கும் குப்பைகளை கொட்டப்பட்டது. அதன் மீது மண் பரப்பி முதற்கட்டமாக ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. அவ்வாறு நடவு செய்த மரக்கன்றுகள் தற்போது வளர்ந்துள்ளன.

இரண்டாம் கட்ட மியாவாக்கி திட்டத்துக்கு வாலாங்குளத்தில் அள்ளப்பட்ட ஆகாயத் தாமரைகளையும், காய்கறி சந்தையில் எடுக்கப்பட்ட குப்பைகளையும் உரமாக்கி மரங்களை வளர்க்க இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


வெள்ளலூர் குளத்தில் மியாவாக்கி முறையில் அடர்த்தியாக மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. முன்னதாக, அந்த இடத்தில் அமைக்கப்பட்ட குழியில், பாதிக்கு சுமார் 150 டன் மக்கும் குப்பைகளை கொட்டப்பட்டது. அதன் மீது மண் பரப்பி முதற்கட்டமாக ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. அவ்வாறு நடவு செய்த மரக்கன்றுகள் தற்போது வளர்ந்துள்ளன.

இரண்டாம் கட்ட மியாவாக்கி திட்டத்துக்கு வாலாங்குளத்தில் அள்ளப்பட்ட ஆகாயத் தாமரைகளையும், காய்கறி சந்தையில் எடுக்கப்பட்ட குப்பைகளையும் உரமாக்கி மரங்களை வளர்க்க இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
