பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காவிரி வரைவு திட்டத்தை சீலிடப்பட்ட உறையில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காவிரி வரைவு திட்டத்தை சீலிடப்பட்ட உறையில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது.
காவிரி நீர் பங்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த 6 வாரங்களுக்குள் வரைவு செயல்திட்டம் (‘ஸ்கீம்’) ஒன்றை ஏற்படுத்துமாறு கடந்த பிப்ரவரி 16-ந் தேதி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, மார்ச் 29-ந் தேதிக்குள் வரைவு செயல்திட்டத்தை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால் தாக்கல் செய்யவில்லை. ‘ஸ்கீம்’ என்றால் என்ன என்று விளக்கம் கேட்டு மேலும் ஒருமனுவை மட்டுமே தாக்கல் செய்தது. இதேபோல், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் மே 3-ந் தேதிக்குள் வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தது. ஆனால், கர்நாடக சட்டசபை தேர்தலைக் கருத்தில் கொண்டு வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்வதை மத்திய அரசு தாமதப்படுத்தி வந்தது. கர்நாடக சட்டசபை தேர்தலைக் காரணம் காட்டி, மத்திய அரசு மேலும் 10 நாட்கள் அவகாசம் கேட்டது. அப்போது, மத்திய அரசு மீது கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், மத்திய நீர்வளத்துறை செயலாளர் நீதிமன்றத்தில் ஆஜராகி, வரைவு செயல் திட்டத்தை 14-ந் தேதி தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர். அத்துடன் வழக்கு விசாரணையை 14-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
அதன்படி, இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் ஆஜராகி, வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்தார். இதையடுத்து, வழக்கு விசாரணை தொடங்கியது. அப்போது, வரைவு செயல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தபின் அரசிதழில் வெளியிடப்படும் என மத்திய அரசு தெரிவித்தது. இந்த வரைவு செயல் திட்டம் குறித்து தங்கள் தரப்பு வாதத்தை பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியமா..? குழுவா..? அல்லது முகமையா..? என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்த வேண்டும் என மத்திய அரசு விளக்கம் கேட்டது.
இதையடுத்து மாநிலங்களுடன் வரைவு செயல் திட்டத்தைப் பகிர்ந்து கருத்துக்களைக் கேட்டறிய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
வரைவுத்திட்டத்தில் என்ன குறிப்பிடப்பட்டு உள்ள முக்கிய விவரம் வருமாறு:-
* உருவாக்கப்படும் காவிரி நீர்ப்பங்கீட்டு அமைப்பில் 2 நிரந்தர உறுப்பினர்கள், பகுதிநேர உறுப்பினர்கள் 2 பேர், மாநிலத்திற்கு ஒருவர் என 4 பேர் அமைப்பில் இருப்பர்.
* மத்திய அரசு அமைக்கும் காவிரி அமைப்பு தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டு அல்லது 65 வயது வரை காவிரி அமைப்பின் தலைவர் பதவியில் நீடிப்பார்
* 10 பேர் கொண்ட நீர்ப்பங்கீட்டு அமைப்பில் யு.பி.சிங்கும் இடம்பெறுவார்
* 10 பேர் கொண்ட அமைப்பில் இருவர் முழுநேர உறுப்பினர்களாக செயல்படுவர்
* குழுவில் தலைவர், மத்திய அரசு அதிகாரிகள் 5 பேர், மாநில பிரதிநிதிகள் 4 பேர் இடம்பெறுவர்
* காவிரி வரைவு செயல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய பின் அரசிதழில் வெளியிடப்படும். காவிரி வாரியமா, குழுவா, ஆணையமா என்பது குறித்து உச்சநீதிமன்றம் அறிவுறுத்த வேண்டும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
காவிரி நீர் பங்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த 6 வாரங்களுக்குள் வரைவு செயல்திட்டம் (‘ஸ்கீம்’) ஒன்றை ஏற்படுத்துமாறு கடந்த பிப்ரவரி 16-ந் தேதி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, மார்ச் 29-ந் தேதிக்குள் வரைவு செயல்திட்டத்தை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால் தாக்கல் செய்யவில்லை. ‘ஸ்கீம்’ என்றால் என்ன என்று விளக்கம் கேட்டு மேலும் ஒருமனுவை மட்டுமே தாக்கல் செய்தது. இதேபோல், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் மே 3-ந் தேதிக்குள் வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தது. ஆனால், கர்நாடக சட்டசபை தேர்தலைக் கருத்தில் கொண்டு வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்வதை மத்திய அரசு தாமதப்படுத்தி வந்தது. கர்நாடக சட்டசபை தேர்தலைக் காரணம் காட்டி, மத்திய அரசு மேலும் 10 நாட்கள் அவகாசம் கேட்டது. அப்போது, மத்திய அரசு மீது கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், மத்திய நீர்வளத்துறை செயலாளர் நீதிமன்றத்தில் ஆஜராகி, வரைவு செயல் திட்டத்தை 14-ந் தேதி தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர். அத்துடன் வழக்கு விசாரணையை 14-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
அதன்படி, இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் ஆஜராகி, வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்தார். இதையடுத்து, வழக்கு விசாரணை தொடங்கியது. அப்போது, வரைவு செயல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தபின் அரசிதழில் வெளியிடப்படும் என மத்திய அரசு தெரிவித்தது. இந்த வரைவு செயல் திட்டம் குறித்து தங்கள் தரப்பு வாதத்தை பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியமா..? குழுவா..? அல்லது முகமையா..? என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்த வேண்டும் என மத்திய அரசு விளக்கம் கேட்டது.
இதையடுத்து மாநிலங்களுடன் வரைவு செயல் திட்டத்தைப் பகிர்ந்து கருத்துக்களைக் கேட்டறிய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
வரைவுத்திட்டத்தில் என்ன குறிப்பிடப்பட்டு உள்ள முக்கிய விவரம் வருமாறு:-
* உருவாக்கப்படும் காவிரி நீர்ப்பங்கீட்டு அமைப்பில் 2 நிரந்தர உறுப்பினர்கள், பகுதிநேர உறுப்பினர்கள் 2 பேர், மாநிலத்திற்கு ஒருவர் என 4 பேர் அமைப்பில் இருப்பர்.
* மத்திய அரசு அமைக்கும் காவிரி அமைப்பு தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டு அல்லது 65 வயது வரை காவிரி அமைப்பின் தலைவர் பதவியில் நீடிப்பார்
* 10 பேர் கொண்ட நீர்ப்பங்கீட்டு அமைப்பில் யு.பி.சிங்கும் இடம்பெறுவார்
* 10 பேர் கொண்ட அமைப்பில் இருவர் முழுநேர உறுப்பினர்களாக செயல்படுவர்
* குழுவில் தலைவர், மத்திய அரசு அதிகாரிகள் 5 பேர், மாநில பிரதிநிதிகள் 4 பேர் இடம்பெறுவர்
* காவிரி வரைவு செயல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய பின் அரசிதழில் வெளியிடப்படும். காவிரி வாரியமா, குழுவா, ஆணையமா என்பது குறித்து உச்சநீதிமன்றம் அறிவுறுத்த வேண்டும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது