கோவை : கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
கோவை : கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
மே மாத தொடக்கத்தில் இருந்து கொங்கு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. பொதுவாக மாலை நேரத்தில் பெய்யும் இந்த கோடை மழை பலத்த காற்றுடன் பெய்கிறது.
இந்த நிலையில், இன்று பிற்பகலுக்கு மேல் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
காற்றின் நிலையற்ற தன்மை காரணமாக இடி மற்றும் மின்னல் ஏற்படலாம் என்றும் திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு மாவட்டத்தில் சில பகுதிகளிலும் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.