பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் குறித்து விளம்பரங்கள் வெளியிடக்கூடாது என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் குறித்து விளம்பரங்கள் வெளியிடக்கூடாது என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
10,11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட உள்ள நிலையில், பள்ளி கல்வித்துறை இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை இயக்குநர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:- 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாவதை முன்னிட்டு, ரேங்க் முறையைப் பின்பற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்துப் பள்ளிகளுக்கும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் தக்க அறிவுரை வழங்க வேண்டும். அரசாணைப்படி செயல்படாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜூன் 1-ந் தேதியே அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும். இதுதொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது, இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை கிருமி நாசினி பயன்படுத்தி தூய்மையாக பராமரிக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் புதர்கள், கழிவுப் பொருட்கள் இல்லாதவாறு தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
பொதுவிடுமுறை முடிந்து ஜூன் 7-ந்தேதி பள்ளிக்கூடம் திறக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
10,11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட உள்ள நிலையில், பள்ளி கல்வித்துறை இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை இயக்குநர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:- 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாவதை முன்னிட்டு, ரேங்க் முறையைப் பின்பற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்துப் பள்ளிகளுக்கும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் தக்க அறிவுரை வழங்க வேண்டும். அரசாணைப்படி செயல்படாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜூன் 1-ந் தேதியே அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும். இதுதொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது, இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை கிருமி நாசினி பயன்படுத்தி தூய்மையாக பராமரிக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் புதர்கள், கழிவுப் பொருட்கள் இல்லாதவாறு தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
பொதுவிடுமுறை முடிந்து ஜூன் 7-ந்தேதி பள்ளிக்கூடம் திறக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.