மழை நீரில் சிக்கிய முதியவரை மீட்டு மறுவாழ்வு அளித்த ஈரநெஞ்சம் அறக்கட்டளை

கோவை: கோவையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள நீரில் சிக்கிய ஆதரவற்ற முதியவரை மீட்ட ஈரநெஞ்சம் அறக்கட்டளையினர், அவருக்கு மறுவாழ்வு அளித்தனர்.

கோவை: கோவையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள நீரில் சிக்கிய ஆதரவற்ற முதியவரை மீட்ட ஈரநெஞ்சம் அறக்கட்டளையினர், அவருக்கு மறுவாழ்வு அளித்தனர்.



மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பெய்த கனமழையால், தாழ்வான மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில், கோவை மத்திய ரயில்நிலையம் லங்கா கார்னர் பாலத்தின் அடியில் குளம் போல நீர் தேங்கிக் கிடந்தது. அதில், ஒரு வயதான ஆதரவற்ற நடக்க முடியாத முதியவர் அமர்ந்திருந்தார். பெருமளவு தண்ணீர் சூழ்ந்ததால், தண்ணீருக்குள் மாட்டிக் கொண்ட முதியவரால் வெளியே வர முடியவில்லை. இதனை அந்த வழியாக சென்ற ஏராளமானோர் வேடிக்கை மட்டுமே பார்த்துச் சென்றனர்.



இந்த நிலையில், தண்ணீரில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முதியவரை, ஈரநெஞ்சம் அறக்கட்டளையினர் பத்திரமாக மீட்டனர். பின்னர், முதியவர் ஈரநெஞ்சம் அறக்கட்டளை பராமரிப்பில் உள்ள முதியோர் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அந்த முதியவருக்குத் தேவையான முதலுதவிகள் அளிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறார். ஈரநெஞ்சம் அறக்கட்டளையின் இந்த செயலை, ஏராளமான பொதுமக்கள் வாழ்த்தி வருகின்றனர்.



Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...