உதகையில் தொடங்கியது 16-வது ரோஜா கண்காட்சி : சுற்றுலாப் பயணிகளுக்கு விருந்தளிக்கும் படைப்புகள்

நீலகிரி : உதகையில் 16-வது ரோஜா கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று தொடங்கி வைத்தார்.

நீலகிரி : உதகையில் 16-வது ரோஜா கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று தொடங்கி வைத்தார். 



நீலகிரி மாவட்டத்தில் கோடைவிழா களைகட்டத் தொடங்கியுள்ளது. இதன் ஒருபகுதியாக, உதகையில் ரோஜா பூங்காவில் 16-வது ரோஜா கண்காட்சி இன்று தொடங்கியது. இதனை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர். அர்ஜுனன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 



இரண்டு நாட்கள் நடைபெறும் கண்காட்சியில் 30 ஆயிரம் சிவப்பு ரோஜாக்களால் வடிவமைக்கப்பட்ட இந்தியா கேட் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. 



சிவப்பு மற்றும் ஊதா நிற ரோஜாக்களால் வடிவமைக்கப்பட்ட சோட்டா பீம் உருவம் கண்காட்சிக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் உள்ளது.



கிருஷ்ணகிரி தோட்டக்கலை துறை சார்பில் 5,000 சிவப்பு மற்றும் மஞ்சள் ரோஜா மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ள படகு, மதுரை தோட்டக்கலைத் துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள காளை, ஈரோடு தோட்டக்கலை சார்பில் அமைக்கப்பட்டுள்ள வண்ணமயில் போன்றவை இந்த ரோஜா கண்காட்சிக்கு மெருகூட்டும் வகையில் உள்ளது. 



நாளை வரை நடக்கும் இந்த ரோஜா கண்காட்சியைக் காண லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...