நீலகிரி : உதகையில் 16-வது ரோஜா கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று தொடங்கி வைத்தார்.
நீலகிரி : உதகையில் 16-வது ரோஜா கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று தொடங்கி வைத்தார்.

நீலகிரி மாவட்டத்தில் கோடைவிழா களைகட்டத் தொடங்கியுள்ளது. இதன் ஒருபகுதியாக, உதகையில் ரோஜா பூங்காவில் 16-வது ரோஜா கண்காட்சி இன்று தொடங்கியது. இதனை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர். அர்ஜுனன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இரண்டு நாட்கள் நடைபெறும் கண்காட்சியில் 30 ஆயிரம் சிவப்பு ரோஜாக்களால் வடிவமைக்கப்பட்ட இந்தியா கேட் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

சிவப்பு மற்றும் ஊதா நிற ரோஜாக்களால் வடிவமைக்கப்பட்ட சோட்டா பீம் உருவம் கண்காட்சிக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் உள்ளது.

கிருஷ்ணகிரி தோட்டக்கலை துறை சார்பில் 5,000 சிவப்பு மற்றும் மஞ்சள் ரோஜா மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ள படகு, மதுரை தோட்டக்கலைத் துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள காளை, ஈரோடு தோட்டக்கலை சார்பில் அமைக்கப்பட்டுள்ள வண்ணமயில் போன்றவை இந்த ரோஜா கண்காட்சிக்கு மெருகூட்டும் வகையில் உள்ளது.

நாளை வரை நடக்கும் இந்த ரோஜா கண்காட்சியைக் காண லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் கோடைவிழா களைகட்டத் தொடங்கியுள்ளது. இதன் ஒருபகுதியாக, உதகையில் ரோஜா பூங்காவில் 16-வது ரோஜா கண்காட்சி இன்று தொடங்கியது. இதனை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர். அர்ஜுனன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இரண்டு நாட்கள் நடைபெறும் கண்காட்சியில் 30 ஆயிரம் சிவப்பு ரோஜாக்களால் வடிவமைக்கப்பட்ட இந்தியா கேட் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

சிவப்பு மற்றும் ஊதா நிற ரோஜாக்களால் வடிவமைக்கப்பட்ட சோட்டா பீம் உருவம் கண்காட்சிக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் உள்ளது.

கிருஷ்ணகிரி தோட்டக்கலை துறை சார்பில் 5,000 சிவப்பு மற்றும் மஞ்சள் ரோஜா மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ள படகு, மதுரை தோட்டக்கலைத் துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள காளை, ஈரோடு தோட்டக்கலை சார்பில் அமைக்கப்பட்டுள்ள வண்ணமயில் போன்றவை இந்த ரோஜா கண்காட்சிக்கு மெருகூட்டும் வகையில் உள்ளது.

நாளை வரை நடக்கும் இந்த ரோஜா கண்காட்சியைக் காண லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.