திருப்பூர் : நீட்ஸ் திட்டம் மூலம் திருப்பூரில் 1,600 பேருக்கு தலா ஒரு கோடி ரூபாய் தொழிற்கடன் வழங்க உள்ளதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் : நீட்ஸ் திட்டம் மூலம் திருப்பூரில் 1,600 பேருக்கு தலா ஒரு கோடி ரூபாய் தொழிற்கடன் வழங்க உள்ளதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தையடுத்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசியதாவது :-
கோடைக் காலத்தில் குடிநீர் மற்றும் மின்சாரம் தடையின்றி வழங்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீட்ஸ் திட்டம் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் 1,600 பேருக்கு தலா ரூ. 1 கோடி தொழிற்கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், திருப்பூரில் பின்னலாடை சார்ந்த தொழில் ஊக்குவிக்கப்படுவதுடன், வேலை வாய்ப்பும் பெருகும்.
கால்நடை பராமரிப்பு மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து தமிழக மாணவர்கள் பயிற்சி பெற அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள வுல்மேன் பல்கலைக்கழகம் மற்றும் ஒக்லாமா ஸ்டேட் பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
இதன்மூலம், மாணவர்கள் அமெரிக்கா சென்று 4 முதல் 6 வார காலம், அங்கு பயிற்சி பெற்று வர வாய்ப்பாக அமையும். மேலும், விலையில்லா கால்நடை வழங்கும் திட்டத்தில் வழங்கப்படும் கால்நடைகளை கால்நடை பராமரிப்பு துறையே இனி வரும் காலங்களில் வழங்கும், என அவர் கூறினார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தையடுத்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசியதாவது :-
கோடைக் காலத்தில் குடிநீர் மற்றும் மின்சாரம் தடையின்றி வழங்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீட்ஸ் திட்டம் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் 1,600 பேருக்கு தலா ரூ. 1 கோடி தொழிற்கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், திருப்பூரில் பின்னலாடை சார்ந்த தொழில் ஊக்குவிக்கப்படுவதுடன், வேலை வாய்ப்பும் பெருகும்.
கால்நடை பராமரிப்பு மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து தமிழக மாணவர்கள் பயிற்சி பெற அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள வுல்மேன் பல்கலைக்கழகம் மற்றும் ஒக்லாமா ஸ்டேட் பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
இதன்மூலம், மாணவர்கள் அமெரிக்கா சென்று 4 முதல் 6 வார காலம், அங்கு பயிற்சி பெற்று வர வாய்ப்பாக அமையும். மேலும், விலையில்லா கால்நடை வழங்கும் திட்டத்தில் வழங்கப்படும் கால்நடைகளை கால்நடை பராமரிப்பு துறையே இனி வரும் காலங்களில் வழங்கும், என அவர் கூறினார்.