தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வங்க கடலில் மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால், வரும் 13-ம் தேதி வரை தமிழகம், கேரளா, புதுச்சேரி, கர்நாடகாவின் உள்மாவட்டங்கள் மற்றும் லட்சத்தீவுகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். காற்று ஈரப்பதத்துடன் வீசும். மேற்கூறிய மாநிலங்களில் புயல் காற்று மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் இருக்கும். குறிப்பாக, அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வங்க கடலில் மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால், வரும் 13-ம் தேதி வரை தமிழகம், கேரளா, புதுச்சேரி, கர்நாடகாவின் உள்மாவட்டங்கள் மற்றும் லட்சத்தீவுகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். காற்று ஈரப்பதத்துடன் வீசும். மேற்கூறிய மாநிலங்களில் புயல் காற்று மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் இருக்கும். குறிப்பாக, அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.