பாய், படுக்கையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேற முயன்ற சி.எம்.சி., காலனி பொதுமக்கள்

கோவை: கோவையில் குடிசை மாற்று வாரிய வீடுகளில் உள்ள முறைகேடுகளை களைய வலியுறுத்தி சி.எம்.சி., காலனி பொதுமக்கள் குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


கோவை: கோவையில் குடிசை மாற்று வாரிய வீடுகளில் உள்ள முறைகேடுகளை களைய வலியுறுத்தி சி.எம்.சி., காலனி பொதுமக்கள் குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சி.எம்.சி., காலனி பகுதியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலும், தலித் மக்களை உள்ளடக்கிய இப்பகுதியில் குடிசை மாற்று வாரியம் மூலமாக, வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு சுமார் 200 பயனாளிகளுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு முறைகேடாக இந்த வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்களை வெள்ளலூர் போன்ற புறநகர் பகுதிகளுக்கு செல்லுமாறு அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.



இதனிடையே, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை முறைகேடுகள் இன்றி பெற்றுத் தர வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாய், தலையணை, காலி குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அவர்கள், தரையில் அமர்ந்து கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.



தினக்கூலி பணிக்கு செல்லும் தங்களுக்கு, சொந்த இடத்திலேயே வீடுகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், முறைகேடுகளில் ஈடுபடும் ஆளுங்கட்சியினர் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக உள்ள அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் விடுத்தனர். பின்னர், ஆர்ப்பாட்டக்காரர்களுடன் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.

Newsletter

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...