கோவை: மூளைச் சாவு அடைந்த கோவையைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஏழு பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார்.
கோவை: மூளைச் சாவு அடைந்த கோவையைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஏழு பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார்.
பீளமேடு பகுதியில் வசித்து வந்தவர் மணிகண்டன் (22). சாலை விபத்து ஒன்றில் தலையில் பலத்த காயமடைந்த அவர் கே.எம்.சி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், நேற்று மணிகண்டனுக்கு மூளைச் சாவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது தாய் லதா மணிகண்டனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தார்.
தானம்
அதன்படி, அவரது இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள், மற்றும் கண்கள் ஆகியவை தானமாக பெறப்பட்டது. கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கும், இதயம் மற்றும் நுரையீரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும். கண்கள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.
கே.எம்.சி.எச் மருத்துவமனையில் கடந்த 7-ம் தேதி திருப்பூரை சேர்ந்த மூளைச் சாவு அடைந்த பெண் ஒருவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பீளமேடு பகுதியில் வசித்து வந்தவர் மணிகண்டன் (22). சாலை விபத்து ஒன்றில் தலையில் பலத்த காயமடைந்த அவர் கே.எம்.சி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், நேற்று மணிகண்டனுக்கு மூளைச் சாவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது தாய் லதா மணிகண்டனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தார்.
தானம்
அதன்படி, அவரது இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள், மற்றும் கண்கள் ஆகியவை தானமாக பெறப்பட்டது. கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கும், இதயம் மற்றும் நுரையீரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும். கண்கள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.
கே.எம்.சி.எச் மருத்துவமனையில் கடந்த 7-ம் தேதி திருப்பூரை சேர்ந்த மூளைச் சாவு அடைந்த பெண் ஒருவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.