குடிநீர் கட்டணம் செலுத்தாத மாநகராட்சி நிர்வாகம்: குடிநீர் வடிகால் சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை: குடிநீர் கட்டணம் செலுத்தாத கோவை மாநகராட்சியைக் கண்டித்து குடிநீர் வடிகால் சங்க ஊழியர்கள் பாரதி பார்க் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: குடிநீர் கட்டணம் செலுத்தாத கோவை மாநகராட்சியைக் கண்டித்து குடிநீர் வடிகால் சங்க ஊழியர்கள் பாரதி பார்க் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை உடனடியாக அமல் படுத்த வேண்டும், குடிநீர் கட்டணமாக மாநகராட்சியால் செலுத்தப்பட வேண்டிய ரூ. 210 கோடி உடனடியாக வசூல் செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு., குடிநீர் வடிகால் சங்கத்தினர் பாரதி பார்க் தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்களுக்கு இதுவரை ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படவில்லை. இந்நிலையில், குடிநீர் வடிகால் வாரியம் ஏற்கனவே நிதி நெருக்கடியில் உள்ளதால் வாரியத்தின் சொந்த நிதியில் இருந்து நடைமுறைப்படுத்திக்கொள்ள அரசாணை வழங்கப்பட்டுள்ளது. குடிநீர் கட்டணமாக உள்ளாட்சி அமைப்புகள் இதுவரை ரூ. 500 கோடி பாக்கி வைத்துள்ளது. இதில், கோவை மாநகராட்சி மட்டும் ரூ. 210 கோடி பாக்கி வைத்துள்ளது.

கடந்த இரண்டு மாதங்களில் கோவை மாநகராட்சி சுமார் ரூ. 250 கோடி வரிவசூல் செய்துள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில், உடனடியாக குடிநீர் வடிகால் வாரியத்திற்குச் செலுத்த வேண்டிய நிலுவை பாக்கிகளை வசூல் செய்ய வேண்டும், உள்ளாட்சி அமைப்புகளின் நிலுவை பாக்கிகளை விரைவில் வசூல் செய்து குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். வேலைப்பளுவை உயர்த்தி ஆட்குறைப்பு செய்வதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சி.ஐ.டி.யு., தமிழ்நாடு வாட்டர் சப்ளை அண்டு ட்ரெயினேஜ் போர்டு வொர்க்கர்ஸ் யூனியன் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் உதவி தலைவர் பிரான்சிஸ், பொதுச்செயலாளர் ஆர்.சரவணன், பொருளாளர் கே.ஆர்.ராஜேந்திரன், சம்மேளன முன்னாள் தலைவர் பாலகுமார், உதவி செயலாளர் பெலிக்ஸ் மற்றும் குடிநீர் வடிகால் ஊழியர்கள் பங்கேற்றனர்.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...