குட்கா ஆலை விவகாரம்: தளபதி முருகேசனுக்கு 25-ம் தேதி வரை நீதிமன்றக் காவல்

கோவை: குட்கா வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட்ட தளபதி முருகேசனை வரும் 25 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.



கோவை: குட்கா வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட்ட தளபதி முருகேசனை வரும் 25 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கோவை மாவட்டம், கண்ணம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டுவந்த குட்கா ஆலை வழக்கு திடீர் திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. ஆலையின் உரிமையாளர் கைது செய்யப்படாத நிலையில், குட்கா ஆலை விவகாரத்தில் போராட்டம் நடத்திய தி.மு.க-வினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில், தி.மு.க.,வை சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர். அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் முன்னாள் ஊராட்சித் தலைவர் தளபதி முருகேசன் என்பவரும் ஒருவர். இவர் குட்கா ஆலை செயல்பட உதவியதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி தெரிவித்தார்.

இந்த நிலையில், நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த முருகேசன், கடந்த மூன்று நாட்களாக சூலூர் காவல் நிலையத்தில் கையெழுத்துப் போடவில்லை. அவரை பற்றி குட்கா ஆலையின் மேலாளர் ரகுராம் அளித்த தகவலின் அடிப்படையில், முருகேசனை சென்னையில் வைத்து போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட முருகேசனை போலீசார் இன்று சூலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவர் மீது சிகரட் மற்றும் புகையிலை தடுப்பு சட்டத்தில் 2 பிரிவுகள் மற்றும் ஐ.பி.சி-யில் 3 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதி வேடியப்பன், முருகேசனை வரும் 25-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனை அடுத்து முருகேசன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...