சோதனை என்ற பெயரில் சித்ரவதை: என்.ஐ.ஏ., மீது மாநகர காவல் ஆணையரிடம் புகார்

கோவை: இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் தங்களை சிக்க வைக்க முயற்சிப்பதாகவும், சோதனை என்ற பெயரில் சித்ரவதை செய்வதாகவும் என்.ஐ.ஏ மீது குடும்பத்தினருடன் சென்று மாநகர காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.


கோவை: இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் தங்களை சிக்க வைக்க முயற்சிப்பதாகவும், சோதனை என்ற பெயரில் சித்ரவதை செய்வதாகவும் என்.ஐ.ஏ மீது குடும்பத்தினருடன் சென்று மாநகர காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.



கோவையில் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த சசிக்குமார் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு, தற்போது அவர்கள் என்.ஐ.ஏ., விசாரணை வட்டத்திற்குள் உள்ளனர். இந்தக், கொலை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு உதவியதாக, மேலும் 5 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக 5 பேரின் வீடுகளிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை 4 மணி முதல் அதிரடி சோதனை நடத்தினர். மேலும், சில பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.



இந்நிலையில், விசாரணை என்ற பெயரில் அத்துமீறி அதிகாரிகள் வீடுகளில் சோதனை செய்வதாகக் கூறி பெபின் ரகுமான், ஹைதர் அலி, அனீஸ் ஆகிய 3 பேரும் தங்களது குடும்பத்தினருடன் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



அந்த மனுவில், என்.ஐ.ஏ., விசாரணைக்கு அழைக்கும் போதெல்லாம் ஒத்துழைப்பு கொடுத்து வரும் நிலையில், அதிகாலையில் அத்துமீறி நுழைந்து சோதனை நடத்த வேண்டிய அவசியம் என்ன..?. மேலும், சசிக்குமார் கொலை வழக்கில் தங்களை வேண்டுமென்றே குற்றவாளிகளாக மாற்ற முயற்சிகள் நடக்கின்றன. இதனால், தங்களது குடும்பத்தினர் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.

Video: Laxman

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...